முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம்
23 May 2012 08:20,
(23 May 07:41 p.m.) திருச்சி, மே 23: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஊர்வலமாக வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை சூட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காலையில் அரசு சார்பிலான மரியாதை செய்யப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சியினரும் தங்கள் தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதுபோல், ஆர். விஸ்வநாதன் என்பவர் தலைமையில் முத்தரையர் சங்கம் அமைப்பினர் வழக்கமாக மாலை நேரத்தில் பெருமளவில் கூடி, முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பர். இன்றும் அதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் திருச்சியின் மையப் பகுதிக்கு வந்தனர். கோஷமிட்டும், பாட்டு பாடியும் கூட்டமாக அவர்கள் வரும்போது பல இடங்களில் தகராறு ஏற்பட்டுள்ளது. திருச்சி தஞ்சாவூர் சாலையில் பால்பண்ணை அருகே ஒரு அணி வந்தபோது, அங்கிருந்த காவலர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக