2 ஜூலை, 2012

முத்தரையர்,சோழர் கால சாலைகள்


முத்தரையர்,சோழர் காலத்தில் சாலைகள் 3 வகைப்பட்டன. அவை,
  1. பெருந்தெருக்கள்
  2. வதிகள்
  3. பெருவழிகள்
  4. பெருந்தெருக்கள்

    சோழர் காலத்தில் நகரத்து நெடிய வீதிகள் பெருந்தெருக்கள் என்று அழைக்கப்பட்டன.[1]

    [தொகு]வதிகள்

    சிற்றூர்களை இணைக்கும் சிறுவழிகள் வதிகள் என்று அழைக்கப்பட்டன.[2]

    [தொகு]பெருவழிகள்

    நகரங்களை இணைக்கும் சாலைகள் பெருவழிகள் எனப்பட்டன.[3] அதில் தஞ்சை நகர பெருவழிகள் நான்கு அவை,
    1. வடுக வழி (வடக்கில் உள்ள வடுக நாடுகளுக்கு சென்றவை)
    2. தடிகை வழி (தடிகைப்பாடிக்கு சென்றது)
    3. மேலைப் பெருவழி (மேற்கு நோக்கிச் சென்றது)
    4. கொங்கு வழி (கொங்கு நாட்டை நோக்கிச் சென்றது)
    மேலுள்ள 4 சாலைகள் சோழப் பேரரசின் தேசிய நெடுஞ்சாலைகளாக இருந்தன.[4]
    குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூறும் பெருவழிகள்
    1. இராச இராசன் பெருவழி
    2. இராசேந்திரன் பெருவழி
    3. குலோத்துங்கன் பெருவழி
    4. விளாங்குடையான் பெருவழி
    5. கூழையானை போன பெருவழி
    6. மேற்குநோக்கிப் போன பெருவழி[5]
    போன்ற பெருவழிகள் கங்கை கொண்ட சோழபுரத்தை நோக்கி அமைந்திருந்தன.[6]
    மற்ற பெருவழிகள்
    1. இராசராசபுர பெருவழி
    2. அரங்கம் நோக்கிய பெருவழி
    3. தஞ்சைப் பெருவழி
    4. பட்டினப் பெருவழி

    [தொகு]தடிவழி வாரியம்

    மேற்கூறிய சாலைகளை உபயோகிப்பவர்களுக்கு தடிவழி வாரியம் மூலம் வரிவிதிக்கப்பட்டது.[7] எந்தெந்த ஊர்களின் வழியாக பெருவழிகள் சென்றனவோ அந்தந்த ஊர்களின் தடிவழி வாரியம் மூலம் பராமரிப்பு வரிகள் பெறப்பட்டன.[8]

    [தொகு]

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........