17 ஜூலை, 2012

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, விஏஓ தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பதாரர்கள் பங்குபெற அழைப்பு
கருத்துகள்பதிவு செய்த நேரம்:2012-07-14 10:43:04
புதுக்கோட்டை,: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, 4 தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. 
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 4 விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியில் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள தேர்வுகளுக்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் நேரிலோ அல்லது தபால் கடிதம் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள் விண்ணப்பித்துள்ள மனுதாரர்களுக்கு தனியாக தெரிவிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலை வாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது