22 டிச., 2023

பூவே உனக்காக

உன்
உள்ள கதவை 
திறந்து விடு...................
உனக்காக
இல்ல கதவும்
இதய கதவும்
என்றுமே
திறந்திருக்கும்
பூவே உனக்காக................. 

V.P.M

வாழ்வே மாயம்

சிட்டுக்குருவி மாதிரி
பறக்க வேண்டிய
சின்ன வயசுல........ 
பட்டு போன காதலால
இடிச்சு போன அவளால
திரும்பி பாத்த அவ கண்ணால
சிரிச்சு போன அவ உதட்டால
என்னை விட்டு போன இதயமும்
கெட்டு போன மனசும்
வாடியே மாயமாகுதடி........
என் வாழ்வே 
மாயமாகுதடி............
 V.P.M

வருஷமெல்லாம் வசந்தம்

என்
இதயத்தில் 
உதயமான
காதல்
உன்
இதயத்தில்
என்று
உதயமாகிறதோ
அன்று
தானடி
எனக்கு
வருஷமெல்லாம் வசந்தம்......... 
V.P.M

பேரழகி.....

நீ 
எப்படியும்
மறைப்பாய்
தலைகுனிந்து 
உன்
முக அழகை
எப்படியடி
மறைப்பாய் 
தலைகுனிந்து 
உன்
கூந்தலின்
பேரழகை.......................... 


V.P.M

காலமெல்லாம் காத்திருப்பேன்....

நீ நிலவாய் வருவாய் என்று 
நான் வானமாய் காத்திருப்பேன். ..........
நீ மழையாய் வருவாய் என்று 
நான் மண்ணாய் காத்திருப்பேன். ...........
நீ சூரியனாய் வருவாய் என்று
நான் பனித்துளியாய் காத்திருப்பேன்........ 
நீ என்னை காதலிப்பாய் என்று
நான் காலமெல்லாம் காத்திருப்பேன்...... 

V.P.M

என் கேள்விக்கு என்ன பதில்....

மனம் விரும்பினால் 
மலர் மாலையுடன் 
என்னை காண வா 
மணவரைக்கு .......
இல்லையேல்
 நாளைய 
மலர் வளையத்துடன்
 என்னை காண வா
 என் கல்லறைக்கு .............

V.P.M

என்றும் காதலுடன்...

உறவுகள் நம்மை பிரிக்கலாம்... 
நினைவுகள் நம்மை பிரிப்பதில்லை....... 
உறவுகள் நம்மை மறுக்கலாம்.... 
நினைவுகள் நம்மை மறுப்பதில்லை 

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........