மண்ணச்சநல்லூரில் விலங்குகள் சரணாலயம் முத்தரையர் சங்கம் கோரிக்கை
கருத்துகள்பதிவு செய்த நேரம்:2012-07-14 11:02:05
திருச்சி, : தமிழ்நாடு முத்தரையர் சங்க செயற்குழு கூட் டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் செல்லாண்டி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாஸ்கரன் தீர்மானங் களை விளக்கிப் பேசி னார். இளைஞர் அணி செயலாளர் பெரியகோபால், மாவட்ட நிர்வாகிகள் தங்கவேல், ராஜமாணிக் கம், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கல்வி, வேலை வாய்ப்புகள், அரசியல் துறைக ளில் 15 சதவிகித ஒதுக்கீட்டை முத்தரையர் சமூகத்துக்கு ஒதுக்க வலியுறுத்தி ஆகஸ்ட்டில் தொடர் முழக்க ஆர்பாட் டம் நடத்துவது. மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண் டும். திருச்சி மண்ணச்சநல்லூரில் விலங்குகள் சரணாலயம் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக