16 மே, 2012

முத்தரையர் சங்கம் சார்பில் வேட்பாளர்:

முத்தரையர் சங்கம் சார்பில் வேட்பாளர்: திண்ணை பிரச்சாரம்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் சிவப்பிரகாசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றிபெற வீடுவீடாக திண்ணை பிரசாரம் செய்யவுள்ளதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் திருமேனி பேசுகையில், ‘புதுக்கோ ட்டை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது 64,000 முத்தரையர் இன வாக்காளர்கள் உள்ளனர்.

ஆனால், அனைத்து கட்சிகளுமே அவர்கள் சாராத எண்ணிக்கையில் குறைவாக உள்ள இனத் திலிருந்துதான் வேட்பாளர்களை தேர்வு செய்து களம் இறக்குகிறார்கள். இம்முறை முத்தரையர் இன பிரதிநிதியாக மலையூர் கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறோம்.

அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக வீடுவீடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து வேட்பாளர் சிவப்பிரகாசம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.



இப்படிக்கு 

அகில உலக முத்தரையர் சங்கம் 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது