நாமக்கல்:மாவட்ட முத்தரையர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
சங்க மாவட்ட பொருளாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோபி முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார்.கூட்டத்தில், ஜாதி வாரி கணக்கெடுப்பில், நாமக்கல் முத்தரையர் இன மக்கள் அனவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். ஒன்பது பட்டப்பெயரில் உள்ள அனைவரும் முத்தரையர் என பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், மகாமுனி, துரைசாமி, நாகராஜன், பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக