25 மே, 2012

முத்தரையர் மக்களின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1337 சதய விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தவர்களை திருச்சி மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறைக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது, ஆண்டாண்டு காலமாக மே 23 ம் நாள் திருச்சியில் லட்சக்கணக்கான முத்தரையர் சொந்தங்கள் திரண்டு அமைதியாக தமது மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்த போது அவற்றையெல்லாம் ஒரு செய்தியாக கூட சொல்லாத தமிழக ஊடகங்கள், இருதினங்களுக்கு முன்பு திருச்சியில் சில இடங்களில் ஏற்பட்ட சிறு சிறு சலசலப்புகளை மிகப் பெரிய வன்முறையாக சித்தரித்து எமது இனத்தை வன்முறையாளர்களாக காட்ட முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம், அன்றைய தினம் மன்னருக்கு மரியாதையை செய்ய வந்த சொந்தங்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை, அங்கு ஒரு போக்குவரத்து ஒழுங்கு கூட செய்யாமல் எமது சொந்தங்களை அலைக்கழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும், தமிழக அரசு அரசு விழாவாக நடக்கும் பேரரசரின் சதய விழாவின் போது திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமாவது அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும், மேலும் பெரும் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவதனால் ஏற்படும் நெரிசலை தடுக்க எல்லா மாவட்ட தலைநகரிலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலை திறந்திட வேண்டும் என்று அரசுக்கு இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது, அன்றைய தினம் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடாத எமது சொந்தங்கள் 46 பேர் மிது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்,

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் எமது உறவுகளை வேண்டிக்கொள்வதெல்லாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனத்திற்கு நாகரிகம் கற்று தந்த கரிகாலனின் வழித்தோன்றல்கள் நாம், நாம் கூடும் இடங்களில் நமது பெயருக்கு களங்கம் செய்ய, நமது இனத்திற்கு களங்கம் ஏற்படுத்த சதிகார கும்பல்கள் காத்து கிடக்கின்றன, அந்த நாசகார கும்பலின் சதியினை முறியடித்து நாளை ஆளப் போகும் இனம் பொறுமையை கைவிடல் ஆகாது என்பதனை வலியுறுத்துகிறோம்

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது