26 மே, 2012

உலக முத்தரையர்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

நண்பர்களே இன்று திருச்சி நண்பர்களை தொடர்புகொண்ட போது இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சிறை வாசம் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கு பல்வேறு ஊர் நண்பர்கள் மூலமாக தகவல் வந்து கொண்டிருப்பதாக கூறினார்கள் ,இன்றும் ராமேஸ்வரத்தில் இருந்து நிறைய சொந்தங்கள் திரிச்சி வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள் ,அதே போல் இன்று நான் திரு ,பாப்பா குறிச்சி முருகேசன் அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நமது குழும உறுப்பினர் ராமன் அவர்களின் பதிவை குறிப்பிட்டு ராமேஸ்வரம் தோழர்கள் சிறையில் இருப்பதை தெரிய படுத்தினேன் ,அவரும் திருச்சியில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அது குறித்து வழக்கறிஞர்கள் விசாரித்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார் ,அதே போல் நமது திருச்சி நண்பர்களிடமும் தெரிய படுத்தி இருக்கிறேன் .இது குறித்து நம் இனம் சார்பாக ஒரு அறிக்கை வெளியுடுமாரும் பாப்பா குரிசியாரிடம் வேண்டினேன் .
என் வேதனை எல்லாம்மனிதர்களை உய்ரோடு எரித்து கொன்றவர்கள் எல்லாம் நாட்டை ஆள அவர்கள் ஆள்வதற்கு வாக்களித்து விட்டு நம் சொந்தங்கள் வருடத்தில்ஒரே நாள் நம் அரசருக்கு மரியாதை செய்வதை கூட தாங்க முடியாமல் ஆதிக்க சக்திகள்,சமுக விரோத கும்பல்கள் விளையாடி இருக்கலாம் அதை எல்லாம் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் ஊர்வலத்துக்கு வந்தவர்களை எல்லாம் கைது செய்வதை ஒரு காலும் அனுமதிக்க முடியாது ,வன்மையாக கண்டிக்க தக்கது ,அப்பாவி சொந்தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் ,அதுதான் ஆளும் கட்சிக்கு மிகபெரிய வாக்கு வங்கியான முத்தரையர் இனத்தை வதைப்பது என்பது வருங் காலத்தில் அதை உணரவேண்டியுருக்கும் .

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது