அன்று நாம் விளையாட்டில் செய்து வந்தது .இன்று பிரமிப்பாக அடுத்தவர் செய்வதை பார்க்கிறோம். நினைவுகளை அசைபோடுங்கள்...
மழைபொழிகிறது ,சிறிது நேரத்தில் மழைவிட்டவுடன் மண்ணில் நண்பர்களுடன் சேர்ந்து காலி தேங்காய் மூடியுடன் களம்மிறங்கி மண்ணில் அழகான வடிவத்தில் தேங்காய் மூடி போன்ற உருவத்தை படைத்தோம் மலையாக செய்தோம், ஆற்று மணலில் கோபுரம் கட்டி சுரங்க பாதை வைத்தோம் ,பல்வேறு வடிவத்தில் வீடு கட்டினோம் .இன்னும் பலவடிவங்கள் செய்த நாம்...
இன்று மணல் சிற்பம் செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறோம். குழந்தைகளை விளையாட விட மறுக்கிறோம். அன்று பல திறமைகளுடன் இருந்த நாம் .இப்போது என்ன செய்கிறோம்...
சிறுவயது விளையாட்டு ஒவ்வொன்றும் நம் படைப்பாற்றலின் வெளிபாடு அதை மறந்து நாம் இன்று பார்வையாளராக வலம் வரும் மர்மம் என்ன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக