15 டிச., 2012

மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வரவேற்பு பேனர் வைத்த திமுக பிரமுகர் மீது வழக்கு!

திருச்சி பாராளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் காஜாமலையில் இன்று (15.12.2012 சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி அவர் தங்கும் சங்கம் ஓட்டலில் இருந்து, செல்லும் வழிகளான பாரதிதாசன் சாலை, ஒத்தக்கடை, டிவிஎஸ்டோல்கேட், அண்ணா விளையாட்டரங்க குதிரை பந்தய சாலை ஆகியவற்றில் வழிநெடுகிலும் பிளக்ஸ் பேனர், கட்சி கொடி, அலங்கார வளைவுகளை அக்கட்சியினர் அமைத்துள்ளனர்.
 
ஒத்தக்கடையிலுள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலை ரவுண்டானாவில் திமுக பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி சார்பில் கட்சி கொடிகளுடன் கூடிய வரவேற்பு பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீர முத்தரையர் பேரவை மாநகர நிர்வாகி கள்ளிக்குடி சம்பத்குமார் கன்டொன்மென்ட் போலீசில் புகார் செய்தார்.
 
அதன்பேரில் தலைவர்கள் சிலையை அவமரியாதை செய்த பிரிவின் கீழும், மாநகராட்சி பகுதியில் உரிய அனுமதியின்றி விளம்பர பிளக்ஸ் வைத்த பிரிவின் கீழும் நவல்பட்டு விஜி மீது கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் அங்கு வைத்திருந்த பிளக்ஸ் போர்டினையும் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........