28 டிச., 2012

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வணக்கம்..!!


இதுவரை பட்டுக்கோட்டையில் பல கூட்டங்கள் முத்தரையர் சமூகத்தினால் நடத்தப் பட்டுள்ளது,பெரும்பாலும் அந்த கூட்டங்களில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கின்றது, முதல்முறையாக "முத்தரையர் சமூக இளைஞர்களை" மட்டும் ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டம் வருகின்ற 2013 ஜனவரி 19 ந் தேதி (சனிக்கிழமை) நடத்த ஏற்க்கனவே நாம் அறிவித்து இருந்தோம், நமக்கு அறிமுகமான பெரும்பாலான நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று நாம் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான நண்பர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர், இந்த நிலையில் இங்கு இணையத்தில் இல்லாத நண்பர்களை நேரில் சந்திக்கும் வண்ணம் ஜனவரி 10 ந் தேதி முதல் 16 ந் தேதி வரை பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரில் செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழுவில் பங்கேற்க்க விருப்பமுள்ள நண்பர்கள் திரு. கண்ணன் நாதன் (0091-7639951844) அவர்களை தொடர்பு கொள்ளவும்,
மேலும் இதுவரை நமக்கு அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் இந்த கூட்டம் தொடர்பான செய்தியினை கொண்டு சென்று விட்டதாக நம்புகிறோம், அவ்வாறு அறிவிப்பினை பெறாத மற்றும் பட்டுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த இதுவரை அறிமுகமாகாத முத்தரையர் உறவுகள் வேறு யாரேனும் இருந்தால் தங்களைப் பற்றிய விவரங்களை தர வேண்டுகிறோம், எல்லோரையும் ஒருங்கிணைப்பது மட்டுமே நமது நோக்கம், யாருக்கும் தகவல் தர விடுபட்டிருந்தால் தயவு செய்து தவறாக கருத வேண்டாம், இப்போதும் உங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறோம்.
நமது கூட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பிற்க்கு முழுமையான ஒத்துழைப்பினை நல்கிவரும் " முத்துராஜா (முத்தரையர்) ஷரிங் குழும" நண்பர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்.

reference:https://www.facebook.com/groups/mutharaiyar/489992967710647/?ref=notif&notif_t=group_activity

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........