4.12.88 ல் திருச்சி மாவட்டம் ,காடுவெட்டி மாநாட்டில் முத்தரையன் மாறன் எழுதி வெளியிட்ட முத்தரையர் வரலாறு ஒரு பார்வை என்ற நூலில்ருந்து எடுக்கப்பட்டது .
பெர்ம்படையை நிர்வகித்து ,போர்களத்தில் தமது பெரும் வீரத்தை மாறனுக்கு உணர்த்தி பெரும் வெற்றிகள் பல பெற்று ,நாட்டை பேணிகாத்து திறமைமிக்க ஆட்சியாளர்களாக திகழ்ந்தா முத்தமிழ் வளர்த்த முத்தரைய வேந்தர்கள் கலைகளைப் போற்றும் கலைஞர் களாகவும் திகழ்ந்து உள்ளனர் .கலைப் புரவலர்களான முத்தரையர்கள் ,பல கோவில்களை கட்டினர் ,பல குடைவரை கோவில்களை குடைந்தனர் ,சில கோவில்களை புதுபித்தனர் .கோவில்களின் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற பல அறக்கொடைகளை விட்டு உள்ளனர்.கலைநயம் கொண்ட பல சிற்பங்களை வடித்து உள்ளனர் .சில பேரழகு வாய்ந்த செப்ப படிமங்களையும் வடித்து உள்ளனர் .இவைகள் இன்றும் அழியாமல் நின்று முத்தரையரின் புகழ் பாடுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக