23 டிச., 2012

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: தூத்துக்குடியில் 26&ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்


பதிவு செய்த நாள் : Dec 22 | 07:43 pm
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

டெல்லியில் பேருந்து ஒன்றில் மருத்துவக் கல்லு£ரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்காக டெல்லியிலே உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் நாடாளுமன்றத்தில் ஓங்கி குரலெழுப்பியதோடு & நகரிலே உள்ள மாணவர்கள் எல்லாம் அதற்காக இன்று வரை கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், தமிழகத்திலே நேற்றையதினம் து£த்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதே நிரம்பிய சிறுமி, துடிக்கத் துடிக்க பலாத்காரம் செய்யப்பட்டு, கொலையும் செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடுமையான சம்பவத்தை கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் கொலைக்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த பரிதாபத்திற்குரிய சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் தி.மு.க. போராட்டம் நடத்துவதென்றும், குறிப்பாக மாணவர் அணியின் சார்பிலும், மகளிர் அணியின் சார்பிலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னால் 26&12&2012 புதன்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........