கடந்த பாஜக ஆட்சியின் போது புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாபரமசிவம், பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு பதவியை இழந்தார். அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிமுக தலைமை அதற்கு மறுத்ததால், சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.
சுயேட்சையாக போட்யிடலாம் என்று கூட முடிவெடுத்திருந்தார். இதற்காக கலைஞரிடம் அனுமதி பெற சென்னையில் முகாமிட்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென ராஜாபரமசிவம், சென்னையில் போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளார்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகல் இணைந்தார். இவருடன், முத்தரையர் சங்கத்தின் மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல.செல்லையா, முன்னாள் சிவகங்கை தேமுதிக பாராளுமன்ற வேட்பாளரான ரெஜினா பாப்பா ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக