7 ஜூன், 2012

ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராஜாபரமசிவம்



கடந்த பாஜக ஆட்சியின் போது புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாபரமசிவம்,  பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு பதவியை இழந்தார்.    அதன் பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குடியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிமுக தலைமை அதற்கு மறுத்ததால், சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். 
இந்நிலையில் முத்தரையர் நிறைந்திருக்கும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினார்.   ஆனால் திமுகவோ தேர்தல் புறக்கணிப்பு செய்துவிட்டது.  
சுயேட்சையாக போட்யிடலாம் என்று கூட முடிவெடுத்திருந்தார்.  இதற்காக கலைஞரிடம் அனுமதி பெற சென்னையில் முகாமிட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென ராஜாபரமசிவம்,  சென்னையில் போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளார்
ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகல் இணைந்தார்.  இவருடன்,  முத்தரையர் சங்கத்தின் மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல.செல்லையா, முன்னாள் சிவகங்கை தேமுதிக பாராளுமன்ற வேட்பாளரான ரெஜினா பாப்பா ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது