8 ஜூன், 2012

அம்பலக்காரர்களும் வேடர்களும் கண்ணப்ப நாயனாருடைய வம்சத்தினர்கள்

முன் காலத்தில் அந்நாட்டு மக்களிற் சிறந்தவர்கள் 
வேடர்கள் என்று சொன்னோம். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் 
குறிஞ்சி நிலத்திற்கு ஏற்றனவாக இருந்தன. வேடர்கள் இக்காலத்திலும் 
தங்கள் பண்டைப் பழக்க வழக்கங்களை விடாமல் போற்றி வருகிறார்கள். 
தமிழ்ச் சில்லாக்களில் தெற்கே
செல்லச் செல்ல அவர்களுடைய நாகரீகம் மிகத்தாழ்ந்து நிற்கிறது. 
மலையாளத்தில் வேடர்கள் இப்போதும் அனாகரீகாக இருக்கிறார்கள். 
ஆனால் தமிழ்நாட்டில் அந்த வகுப்பிற்கு இணையாக இருக்கும் 
வேட்டுவர்கள் நாகரீகத்தில் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அம்பலக்காரர் 
என்ற மற்றொரு வகையாரும் முன்னேற்றம் அடைந்தவர்களே. 
அம்பலக்காரர்களும் வேடர்களும் கண்ணப்ப நாயனாருடைய வம்சத்தினர்கள் 
என்று தங்களைப் பெருமைப்படுத்திப் பேசிக் கொள்கிறார்கள். தெலுங்கு 
போயர்களோ தாங்கள் வால்மீகி ரிஷியினுடைய சந்ததிகள் என்று 
சொல்லிக்கொள்ளுகிறார்கள். முன் காலத்தில் பொத்தப்பிநாட்டு மக்கள் 
தமிழ்மொழி பேசினவர்களாக இருக்க வேண்டும். வேடர்கள் 
தமிழ்மொழியையே தாய்மொழியாகக் கொண்டிருத்தல் வேண்டும். 
ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு இப்பால் ஏற்பட்ட கல்வெட்டுக்களிலே 
பெரும்பாலும் தமிழ் மொழி வழங்கப்பட்டிருக்கும்போது 2000 ஆண்டுகளுக்கு 
முந்திக் கண்டிப்பாகத் தமிழ் மொழியையே அந்நாட்டார் வழங்கி இருக்க 
வேண்டும் அல்லவா? ஊர்ப்பெயர்கள் மக்கள் பெயர்கள் எல்லாம் தமிழ் 
மயமாகவே இருக்கின்றன. மேலும் ஆறுகளின் பெயர்களும், மலைகளின் 
பெயர்களும் தமிழ் மொழிகளே. பெண்ணையாறு செய்யாறு (சேயாறு) 
இவைகளைக் காண்க. சேய் + ஆறு = சேயாறு - முருகக் கடவுள் ஆறு 
எனப்பொருள்படும். முருகக்கடவுள் வேடர்களின் குலதெய்வம் அல்லவா? 
பொத்தப்பிச் சிவரலயத்தின் சுவாமியின் பெயர் மூலத்தானேசுவரர் என்றால் 
அதுவும் தமிழ் மயமன்றோ?

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது