10 ஜூன், 2012

முத்தரையர்


முத்தரையர்கள் கால வல்லம்(முத்தரையர்கள் என்னும் கங்கர்களை )
இதன் பின் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சோழ நாடுபல்லவப் பேரரசர்களின் ஆளுகையில் இருந்தது. அவர்களது குறுநில மன்னர்களாக முத்தரையர்கள் என்னும் கங்கர்களை நியமித்தனர்.
திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள நியமம் ஊரில் பிடாரி கோயில் தூண்களில் உள்ள கல்வெட்டுகிளின் மூலம் முத்தரையர்கள் பற்றிய பல செய்திகள் அறியமுடிகிறது. பிடாரி கோயில் இடிபாடுற்று அழிந்தது. பின்நாளில் செந்தலை கோயிலில் இந்த தூண்கள் கொண்டு மண்டபம் கட்டப்பட்டது. அக்கல்வேட்டுகிளில் பாச்சில் வேள் நம்பன் என்னும் புலவர் பாடிய பாட்டு ஒன்றிலிருந்து 'எங்கும் ஆற்றில் வருகின்ற நீரால் சூழப்பட்ட வல்லத்து அரசனாகிய மாறனுடன் செய்த போரில் வீரம் நிரம்பிய இடங்களில் ....' என்று பொருள்படுவதாலும், வல்லம் முத்தரையர்கள் ஆளுகையிலிருந்து இருக்கிறது என்பதை அறிகிறோம். கி.பி. 850ல் விஜயாலயச் சோழன் தஞ்சையையும், வல்லத்தையும் கைப்பற்றி சோழர் ஆட்சியை தொடங்கும் வரை முத்தரையர்களுடைய ஆட்சிலேயே வல்லம் நகரம் இருந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது