திருச்சி, ஜூன். 15-
முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மணல் குவாரி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை மத்திய மந்திரி மு.க.அழகிரி திருச்சி சிறையில் இன்று காலை சந்தித்து பேசினார். சிறையில் இருந்து வெளியே வந்த மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐ.பெரியசாமியை சிறையில் சந்தித்து பேசினேன். அவர் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றும் அதை சந்திக்க தயார் என்றும் கூறினார். தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருகிறார்கள். அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக