5 ஜூன், 2012

தகவல் சுரங்கம்-முத்தரையர் மாதம்


தகவல் சுரங்கம் - முத்தரையர் மாதம் - நன்றி: தினமலர்

ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தை, தமிழ்ச் சமுதாயத்தில் முத்தரையர் மாதமாக கொண்டாடு கின்றனர். மே 23ம் நாள் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளின் முன்னும், பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. முதன்முதலில் பல்லவர் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த முத்தரையர்கள் பின், பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்கு உட்பட்ட பகுதிகளில் குறுநில மன்னர்களாக இருந்தனர். கடற்கரைப் பகுதிகளில் முத்து குளிக்கும் பகுதிகளில் இவர்களது ஆட்சி நடைபெற்றது. "அரையர்' என்னும் சொல்லுக்கு நாடாள்வோர் என்பது பொருளாகும். அதனால் தான் இவர்களுக்கு முத்தரையர் என பெயர் வந்தது. இவர்கள் பாண்டிய மன்னர்களைப் போல, தங்கள் கொடிகளில் மீன்களைப் பொறித்து வைத்திருந்தனர். பல்லவர்களின் பட்டப் பெயர்களை தங்கள் பெயர்களோடு இணைத்து வைத்திருந்தனர். பெரும்பிடுகு என்பதில் பிடுகு என்பது "வலிமையான இடி' என்பதை குறிக்கிறது.

to visit : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=476925

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது