14 பிப்., 2013

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை


புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், இவரும் புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இவர் தஞ்சாவூர் சாலையிலிருந்து புதுக்கோட்டை வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வழிமறிந்து மச்சிவாடி என்ற இடத்தில் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவம் பற்றி அறிந்த வக்கீல்கள் ஏராளமானோர் கோர்ட்டை புறக்கணித்துவிட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், இவரும் புதுக்கோட்டை கோர்ட்டில்  வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இவர் தஞ்சாவூர் சாலையிலிருந்து புதுக்கோட்டை வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வழிமறிந்து மச்சிவாடி என்ற இடத்தில் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

மேலும் சம்பவம் பற்றி அறிந்த வக்கீல்கள் ஏராளமானோர் கோர்ட்டை புறக்கணித்துவிட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது