8 பிப்., 2013

தொட்டியம் கொங்குநாடு கல்லூரி தலைவர்


பி.எஸ்.கே.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மேல்நிலைக்கல்வித்துறை கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான தொழில் பழகுனர் வாரியம் சார்பில் 2–வது ஆண்டாக தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 60–க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த முகாம் மூலம் 6,500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டிப்ளமோ பயின்றவர்களுக்கு 4,500 இடங்களும், பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு 500 இடங்களுக்கும், 12–ம் வகுப்பில் தொழில்கல்வி பயின்றவர்களுக்கு 2 ஆயிரம் இடங்களும் நேர்காணல் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 8012505088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது