13 பிப்., 2013

புதுக்கோட்டையில் இன்று காலை வக்கீல் வெட்டிக்கொலை:


நடுரோட்டில் மர்ம நபர்கள் வெறிச்செயல் Pudukkottai திங்கட்கிழமை, பெப்ரவரி 11, 11:24 AM IST 0கருத்துக்கள்0 இமெயில் பிரதி


புதுக்கோட்டை, பிப். 11-

புதுக்கோட்டை கண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 26). இவர் புதுக்கோட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் கோர்ட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

மச்சுவாடி என்ற இடத்தில் உள்ள தனியார் இரும்பு ஆணி தொழிற்சாலை அருகே வந்தபோது அவரை பின்தொடர்ந்து 2 மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்தனர். ஆனால் அவர்களை கண்ணன் கவனிக்கவில்லை.

திடீரென அவரை முந்தி சென்ற அந்த மர்ம நபர்கள் கண்ணனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணணை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

இதில் உடலின் பல இடங்களில் வெட்டு காயங்கள் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் இறந்தார். அவரை கொன்ற அந்த 2 மர்ம நபர்களும் எந்தவித பதட்டமும் இன்றி தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவம் பற்றி அறிந்த வக்கீல்கள் ஏராளமானோர் கோர்ட்டை புறக்கணித்துவிட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது