9 செப்., 2012

முத்தரையர் வளர்ச்சி சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு



திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று
நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைத்தார்.
 
முத்தரையர் வளர்ச்சி சங்கம் தலைவர் அருணாச்சலம்
அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பொன்னுரங்கபுரம்,
திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு ஆகிய
ஊர்கள் உள்ளது. இப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர் திருவானைக்காவல்,
திருச்சிக்கு செல்ல திருச்சி - சென்னை நான்கு வழி சாலையை கடந்து
செல்கின்றனர். சாலையை கடக்கும் போது அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது.
எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். கிளிக்கூடு இடையாற்று மங்கலம்
இடையே கொளளிட ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும், என
குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது