நாம் கடந்த பதிவில் பதிவிட்டதை போன்று
பாதயாத்திரை நமது சொந்த பந்தங்களுக்கு நன்மை அளிக்கும் என்பதை நம்பினோம்.
அதே போன்று நமக்கு நன்மை அளித்தது.
வருடங்கள் முழுவதும் வேலைக்கு சென்று பழக கூடிய வாய்ப்புகளை தவற விட்டவர்களுக்கு ஆன்மீக பயணங்கள் சந்தோஷத்தை தந்தது.
மாசி மகத்தை நோக்கிய பயணம் வெற்றியை தந்தது.
எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறியது.
எதிர்ப்புகள் இல்லாத வண்ணம் நடைபெற்றது.
கருத்துகளை பரிமாறி கொண்டும் தங்கள் சந்தோஷத்தையும் வெளிபடுத்தி கொண்டனர்.
பழைய கடந்த கால நினைவுகளையும் பதிவிட்டனர்.
ஓய்வு நேரங்கள் மிகுதியாக இருந்ததனால் சிரமங்கள் இல்லாமல் பொழுதை களித்தனர்.
சாப்பாடு விஷயங்களில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.
ஆன்மிக பயணம் சென்றதனால் தலையூற்றாறுக்கு சென்று வர நேர்ந்தது
அதன் அருகே உள்ள நல்காசி சிவன் மற்றும் நல்காசி விசாலாட்சிஅம்மனை வழிபாடு செய்ய முடிந்தது.
சப்த கன்னிமார்களையும் சந்தன கருப்பண்ணசாமியும் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை.
நீல வரதராஜ பெருமாள் கோவிலுக்கும் சென்றும் வந்தோம்.
இணையும் உறவுகள் கருத்துகள் யாவும் ஒன்றாகவே இருந்தன.
காவி வேட்டியை கட்டணும் சங்க பனியனை போடனும் அதான் இலக்கு.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக