திருச்சி: கடையை காலி செய்யும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியவரை வீர முத்தரையர் சங்க தலைவரின் ஆதரவாளர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வீரமுத்தரையர் சங்க தலைவர் செல்வக்குமார் தீரன்நகரில் உள்ள வாடகை கட்டிடத்தில் டீக்கடை வைத்துள்ளார். இவரது கடை அருகே பேக்கரி உள்ளது. கட்டிட உரிமையாளர் செல்வத்திடம், பேக்கரியை காலி செய்து தரும்படி செல்வக்குமார் கேட்டுள்ளார். பேக்கரி உரிமையாளர் கடையை காலி செய்ய அவகாசம் கேட்டார்.
இதற்கிடையே, செல்வக்குமாரின் ஆதரவாளர்கள் மணி, மோகன் உள்ளிட்டோர் நேற்று மாலை பேக்கரி கடையில் வாக்குவாதம் செய்தனர். அப்போது, கருமண்டபத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேச்சு நடத்தினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது.இதில், செல்வக்குமாரின் ஆதரவாளர்கள் கிருஷ்ணனை அரிவாளால் வெட்டினர். காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருச்சி வீரமுத்தரையர் சங்க தலைவர் செல்வக்குமார் தீரன்நகரில் உள்ள வாடகை கட்டிடத்தில் டீக்கடை வைத்துள்ளார். இவரது கடை அருகே பேக்கரி உள்ளது. கட்டிட உரிமையாளர் செல்வத்திடம், பேக்கரியை காலி செய்து தரும்படி செல்வக்குமார் கேட்டுள்ளார். பேக்கரி உரிமையாளர் கடையை காலி செய்ய அவகாசம் கேட்டார்.
இதற்கிடையே, செல்வக்குமாரின் ஆதரவாளர்கள் மணி, மோகன் உள்ளிட்டோர் நேற்று மாலை பேக்கரி கடையில் வாக்குவாதம் செய்தனர். அப்போது, கருமண்டபத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பேச்சு நடத்தினார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது.இதில், செல்வக்குமாரின் ஆதரவாளர்கள் கிருஷ்ணனை அரிவாளால் வெட்டினர். காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸார் விசாரிக்கின்றனர்.
பழகி பார்த்த தங்கம் டா...........மோதி பார்த்த சிங்கமா டா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக