ராமேசுவரம், மே 23: ராமேசுவரத்தில் அருகே அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) ராஜசேகரன் அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
ராமேசுவரம் அருகே ஏர்க்காடு கிராமத்தில் வசிக்கும் சமூகத்தினர் சனிக்கிழமை இரவு பெரும்பிடுகு முத்தரையரின் 5 அடி உயர சிலையை திறந்துவைத்து பூஜை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் தாசில்தார் ராஜேந்திரன், டி.எஸ்.பி. கமலாபாய் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்கு விரைந்துசென்றனர் அங்குள்ள கிராமப் பிரமுகர்களிடம் அனுமதியின்றி சிலை நிறுவக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலை குறித்து ராமநாதபுரம் கோட்டாசியர் இளங்கோ, கூடுதல் போலீஸ் எஸ்.பி. சூரியபிரகாஷ் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கிராம முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தமுடியாமல் போனது. இதன்பின்னர் அதிகாரிகள் உத்தரவின்படி சிலையை துணியால் சுற்றி மூடிவைத்தனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி. ராஜசேகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில்கோட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி., தாசில்தார் ஆகியோர் கலந்துகொண்டனர். இக் கூட்டத்தில் அரசின் அனுமதிபெறும் வரை சிலையை திறக்கவேண்டாம் என அறிவுறுத்தியதாகவும்; இதுகுறித்து கிராமப் பிரமுகர்களிடம் செவ்வாய்க்கிழமை ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
ராமேசுவரம் அருகே ஏர்க்காடு கிராமத்தில் வசிக்கும் சமூகத்தினர் சனிக்கிழமை இரவு பெரும்பிடுகு முத்தரையரின் 5 அடி உயர சிலையை திறந்துவைத்து பூஜை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் தாசில்தார் ராஜேந்திரன், டி.எஸ்.பி. கமலாபாய் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்கு விரைந்துசென்றனர் அங்குள்ள கிராமப் பிரமுகர்களிடம் அனுமதியின்றி சிலை நிறுவக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலை குறித்து ராமநாதபுரம் கோட்டாசியர் இளங்கோ, கூடுதல் போலீஸ் எஸ்.பி. சூரியபிரகாஷ் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கிராம முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தமுடியாமல் போனது. இதன்பின்னர் அதிகாரிகள் உத்தரவின்படி சிலையை துணியால் சுற்றி மூடிவைத்தனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி. ராஜசேகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில்கோட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி., தாசில்தார் ஆகியோர் கலந்துகொண்டனர். இக் கூட்டத்தில் அரசின் அனுமதிபெறும் வரை சிலையை திறக்கவேண்டாம் என அறிவுறுத்தியதாகவும்; இதுகுறித்து கிராமப் பிரமுகர்களிடம் செவ்வாய்க்கிழமை ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக