28 நவ., 2012

நமது இனத்தவர்கள் முன்னேற்றம் அடையவேண்டும்


நமது இனத்தவர்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என்று சொல்லிகொண்டுமட்டும்தான் இருக்கிறோம்,நமது இனத்தவர்களின்
முன்னேற்றதிற்கு முட்டுகட்டையாக இருப்பது நம் இனத்தவர்களே
ஆம் அனைவருக்கும் தலைவனாக வேண்டும் என்ற ஆசை,இந்த
ஆசையை எப்போது துரக்கிறோமோ அப்போது கன்டிப்பாக நமது
இனம் முன்னேற்றம் அடைந்துவிடும்.

ஆளுக்கொரு group யை உருவாக்கி உள்ளார்கள் அதில் அவரே
தலைவர் , பொருளாளர் , சொயளாளர். அனைத்தும் அதில் தன் விருப்பம்
போல நபர்களை சேர்த்துகொள்வது ,ஏன் ஒரே group ல் தங்களது கருத்துகளை
சொன்னால் ஏற்றுகொள்ளமாட்டார்களா , நமது நண்பர்கள் சிலருக்கு
தலைவனாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது .தலைவனாக இருந்த சிலரின்
நிலமை தற்போது எவ்வாறு உள்ளது என்று அனைவரும் அறிந்ததே

நமது குழுமத்தில் சிலர் அவர்களின் பதிவிற்கு Like , comment . வந்தால்
போதும் என்று சில தேவையற்ற விஷயங்களை எழுதுகிறார்கள் அதனை,அதனை ஏன்
என்று கேட்டால் நான் கெட்டவன் என்கிறார்கள். நல்ல விஷயத்தை மட்டும் எழுதுங்கள்
நண்பர்களே.

நமது இனத்தவர்களில் 30%பேர் வசதி உள்ளவர்கள் , 40%பேர் நடுத்தர குடும்பத்தை
சார்ந்தவர்கள் 30%பேர் ஏழைகள் , இதில் ஏழைகள் இதனை கண்டுகொள்ளுவதில்லை
வசதி உள்ளவர்கள் கண்டும் கானாததுபோல் இருக்கிறார்கள் ,நடுத்தர குடும்பத்தை சார்ந்த
நாம்தான் நமது இனத்தவர்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என்று போராடிகொண்டுள்ளோம்.
உண்மையில் நமது இனத்தவர்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் 30% உள்ள
வசதி உள்ளவர்கள் இதில் முன்வர வேண்டும்.

நமது இனத்தவர்களின் பணம் நீருக்கும்,நெருப்புக்கும் இரையாகியது , நம்
இனத்தவருக்கு உதவவில்லை

நமது குழுமத்தில் சில தலைவர்களும் உள்ளார்கள் , அவர்கள் இதனை வேடிக்கை
மட்டும்தான் பார்கிறார்கள் வேறு எதையும் செய்யவில்லை,தலைவர்களே உங்களது
கருத்துக்களையும் சொல்லுங்கள் .....

இது யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்தில் எழுதபடவில்லை , நான் தவறாக
எழுதியிருந்தால் மன்னித்துவிடுங்கள் நண்பர்களே....

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........