10 ஆக., 2013

Tamilnadu TET Hall Ticket download 2013

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

          Tamil Nadu TET for the year 2012–2013

horizontal rule
  Generate Your Admit Card
    Enter your Application No. (eg.1200000) 
          (for all the candidates who have applied for Examination)

                                   Application No.          * 

                                                              

5 ஆக., 2013

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா முதலிடம்



துபாய்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சு தர வரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் தர வரிசை
ஜிம்பாப்வே–இந்தியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டி தொடர் முடிவில் அணிகள் மற்றும் பேட்டிங், பந்து வீச்சில் வீரர்களுக்கான தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
இதன்படி இந்திய அணி (123 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 2–வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி (114 புள்ளிகள்) 2–வது இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி (112 புள்ளிகள்) 3–வது இடமும், இலங்கை அணி (111 புள்ளிகள்) 4–வது இடமும், தென் ஆப்பிரிக்க அணி (105 புள்ளிகள்) 5–வது இடமும், பாகிஸ்தான் அணி (102 புள்ளிகள்) 6–வது இடத்திலும் இருக்கின்றன.
பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா முதலிடத்திலும், டிவில்லியர்ஸ் 2–வது இடத்திலும் தொடருகின்றனர். இலங்கை வீரர் சங்கக்கரா 3–வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இந்திய வீரர் விராட்கோலி ஒரு இடம் பின்தங்கி 4–வது இடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் சுரேஷ்ரெய்னா ஒரு இடம் முன்னேறி 17–வது இடத்தையும், ஷிகர் தவான் 16 இடங்கள் முன்னேற்றம் கண்டு 23–வது இடமும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சில் ஜடேஜா முதலிடம்
பந்து வீச்சு தர வரிசையில் ஜிம்பாப்வே தொடரில் 5 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினுடன் இணைந்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய அமித் மிஸ்ரா ஜிம்பாப்வே தொடரில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்து 47 இடங்கள் முன்னேறி 32–வது இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டி பந்து வீச்சு தர வரிசையில் முதலிடம் பிடித்த 4–வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற ரவீந்திர ஜடேஜா, 17 வருடத்துக்கு பிறகு ஒருநாள் போட்டி தர வரிசையில் முதலிடம் பிடித்த இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். கடைசியாக 1996–ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே முதலிடம் வகித்துள்ளார். ஒருநாள் போட்டி பந்து வீச்சு தர வரிசையில் ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த கபில்தேவ் (1989, மார்ச்), மனிந்தர்சிங் (1987 டிசம்பர் முதல் 1988 நவம்பர் வரை) ஆகியோர் முதலிடத்தில் இருந்துள்ளனர்.

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வரலாறு படைத்தது இந்தியா


மோன்சென்கிளாட்பேச்
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்று புதிய சரித்திரம் படைத்தது.
ஜூனியர் ஆக்கி
16 அணிகள் இடையிலான பெண்களுக்கான 7–வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஜெர்மனியின் மோன்சென்கிளாட்பேச் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3–வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. 13–வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை ராணி கோல் போட்டார். பிற்பாதியின் 55–வது நிமிடத்தில் இங்கிலாந்தின் தாமன் அன்னா பதில் கோல் திருப்பினார். இதன் பின்னர் மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் வழக்கமான நேரத்தில் ஆட்டம் 1–1 என்ற கணக்கில் சமனிலையில் முடிந்தது.
இதையடுத்து வெற்றி தோல்வியை முடிவு செய்ய பெனால்டி ஷூட்–அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் வழங்கப்பட்ட 5 வாய்ப்பில் இந்திய தரப்பில் ராணியும், இங்கிலாந்து தரப்பில் டெப்ரோன்ட் எமிலியும் கோல் அடித்தனர். மற்ற அனைத்து வாய்ப்புகளும் வீணாகின. இதுவும் 1–1 என்று சமநிலை ஆனதால், ‘சடன்டெத்’ முறை கொண்டு வரப்பட்டது.
இந்தியாவுக்கு பதக்கம்
‘சடன்டெத்’ முறையின் முதல் வாய்ப்பில் இந்திய வீராங்கனை ராணியும், இங்கிலாந்து வீராங்கனை டெப்ரோன்ட் எமிலியும் கோலாக்கினர். 2–வது வாய்ப்பை பூனம் ராணி (இந்தியா), மெக்கலின் சோனா (இங்கிலாந்து கேப்டன்) இருவரும் கோட்டை விட்டனர். 3–வது வாய்ப்பில் இந்தியாவின் 17 வயதான நவ்னீத் கவுர் கோலாக்கினார். அதே சமயம் இந்த வாய்ப்பை இங்கிலாந்தின் தாமன் அன்னா தவற விட இந்தியாவின் வெற்றி உறுதியானது. பெனால்டி ஷூட்–அவுட் முடிவில் இந்திய அணி 3–2 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்திற்கு முத்திட்டு புதிய வரலாறு படைத்தது.
24 ஆண்டுகால பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி வரலாற்றில் இந்திய அணி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். பலம் குறைந்த அணியாக வர்ணிக்கப்பட்ட இந்தியா, பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்–அவுட்டின் போது இந்தியாவின் கோல் கீப்பராக கடைசி நேரத்தில் நிங்கோம்பாமுக்கு பதிலாக பைகான் பாய் செயல்பட்டார். இந்த வாய்ப்புக்கு முன்பாக அந்த உலக கோப்பையில் ஒரு நிமிடம் கூட களம் காணாத அவர் பெனால் ஷூட்–அவுட்டில் அருமையாக செயல்பட்டதை அனைத்து வீராங்கனைகளும் கட்டித்தழுவி பாராட்டினார்கள்.

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...