2 மே, 2013

நேரு மறைவு கற்றுதந்த பாடம்...


முத்துபேட்டையில் நேரு ஆட்டோ மொபைல்ஸ் என்ற நிறுவனத்தை திறம்பட நிர்வகித்து அதன் மூலம் சுற்று வட்டார பகுதி இளைஞர் மத்தியில் நல்ல பெயரும் ,அறிமுகமும் கொண்டிருந்தார் நேரு .. தன் நிறுவனத்தின் மூலம் பல இளைஞர்களுக்கு வேலையும் வழங்கி வந்தார் .இந்த சமயத்தில் முத்துபேட்டையில் அடிக்கடி நடைபெறும் தேவர் _முஸ்லிம் சண்டை .இந்து _முஸ்லிம் சண்டை என பெயரிடப்பட்டது .இதில் கலந்து கொள்ள அவரின் வாடிக்கையாளரும் ,நண்பருமாகிய .தேவர் இனத்தை சேர்ந்த ஒருவரால் ,நம் சமுதாய இளைஞர் களிடம் செல்வாக்குடன் இருந்த நேருவை கட்டாயமாக உள்ளே கொண்டு சென்றார் .நேருவும் நட்பிற்கு கைமாறாக நம் சமுதாய மக்களை திசை திருப்பி இந்த பிரச்சினைகளை கண்டு கொள்ளக் கூடிய ஒரு
மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார். இந்த சந்தர்ப்பங்களை பயன் படுத்தி நேருவின் நண்பர் .( KARUPU ) பாரதீய ஜனதா கட்சி .ஒன்றிய செயலாளர் பதவி பெறுகிறார் ..அதற்க்கு நேரு பல வகையிலும் துணையாக இருந்தார்.

நம் கிராமங்கள் தோறும் பா.ஜ .க .கொடிகள் ஆக்கிரமித்து கொண்டது .இந்த சமயத்தில் 2001 இல் உள்ளாட்சி தேர்தல் ,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு எல்லா கட்சிகளும் போட்டி ,நம் இனத்தின் .தமிழர் பூமி சார்பாகவும் வேட்பாளர் போட்டியிடுகின்றார் ,மிக நம்பிக்கையுடன் ஏனென்றால் நம் இன வாக்குகளே வெற்றியை முடிவு செய்யும் .ஆனால் தேவர் இனத்தை சேர்ந்த நேருவின் நண்பர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி .இதற்க்கு முழு காரணமும் நேரு என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை KARUPU க்கு அரசியல் வளர்ச்சியும் ,அடிதடி கும்பலின் துணையும் வட்டாரத்தில் அதிகமான கட்டை பஞ்சாயத்துகளை உருவாக்குகிறது .இந்த நிலையில் ஜம்புவநோடை கிராமத்தை சேர்த்த முத்தரையர் இன பெண்ணை தலித் இனத்தவன் அழைத்து சென்று விடுகிறான் .. நேருவின் கருத்துக்கு எதிராக பேசி முடிக்கப்பட்ட ஒரு கலப்பு திருமண ,விவகார கட்டை பஞ்சாயத்தால் ,நேரு அதிருப்பதி அடைகிறார் . தன்னால் உருவாக்கப்பட்ட நண்பன் நட்பை விட தேவர் என்பதை நேருவுக்கு புரிய வைக்கிறார் . தனது குரலுக்கு மரியாதை இல்லை என்பதையும், நட்பைவிட சாதி உணர்வே பெரிதாக கருதிய நண்பரின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி .அவரிடம் உள்ள நம் சமுதாய மக்களை முத்தரையர் சங்கத்தின் மூலம் தாமே தலைமை ஏற்று வழி நடத்திச் செல்ல விரும்பி அதற்க்கான முயற்ச்சிகளை தொடங்குகிறார் . இதற்கு முன்பு சங்கத்தை வழி நடத்திய அலங்காடு LSB , மேகநாதன் , தமிழழகன் அனைவரும் ஒரு மனதாக ஒப்புதலும் தெரிவித்தனர... மே மாதம் 2 ஆம் தேதி அலங்காடு LSB இல்லத்தில் அனைவரது முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது .எதிர்வரும் மே 23 இல் நேரு தலைமையில் நமது மன்னரின் சதய விழா கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது ... இதற்கிடையில் ஜாம்புவானோடையில் ,நேருவிற்கும் ,அவரது தேவர் நண்பருக்கும் சொந்த கிராமம் .அங்கு இரவு நடந்த கோவில் திருவிழா நிகழ்ச்சியில்சொந்த கிராமம் என்பதாலோ என்னவோ நேரு தனியாக கலந்து கொள்கிறார் . ஆனால் இது தேவர்களை அதிகமாக கொண்ட கோவில் திருவிழா அன்று அவர்களின் மண்டகப்படி . ஆனால் கொலைகாரர்கள் முன்பே திட்டமிட்டு காத்திருந்துள்ளனர் .திருவிழாவின் ஒரு பகுதியாக பிரபலமான குழுவினரின் இசை கச்சேரி நடைபெறுகிறது .அங்கு சென்றிருந்த ஒரு சில நம் இளைஞர்களும் கவனத்தை அதில் செலுத்தியிருந்தனர் ,நடைபெறப் போகும் விபரீதம் அறியாமல். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேருவுக்கு நன்கு அறிமுகமான சில தேவரின முன்னாள் நண்பர்களால் தனியாக பேசவேண்டும் ,என்று கூறி வெளிச்சம் குறைவான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் .ஆனால் இது சூழ்ச்சி தம்மை தாக்க போகிறார்கள் என்பதை அந்த சமயம் அங்கு ஆயுதத்துடன் நின்று கொண்டிருந்த தன்னால் உருவாக்கப்பட்ட நண்பரை பார்த்து நிதானிப் பதற்குள் தாக்கி கொலை செய்யப் பட்டார்........

கருத்துகள் இல்லை:

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...