6 மார்., 2013

தமிழீழ விடுதலையை விரைவாக்க முயல்வோம்




நண்பர்களே தயவுசெய்து இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் உங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்,இல்லாவிட்டால் குறைந்தபட்சம் like பண்ணுங்கள்.

என் அன்புள்ள நண்பர்களே !!
facebook மூலம் நாம் தகவல்களைப் பரப்புவதால் தமிழீழ விடுதலையை விரைவாக்க முயல்வோம்,குறிப்பாக நீங்கள் ஒவ்வொருவரும் தமிழ்ப்பற்றுள்ள,தமிழீழத்தில் பற்றுள்ள,தமிழ் மக்களில் பற்றுள்ள,தலைவருக்கு உண்மையான அவர் மீது நம்பிக்கையுள்ள பாசம் உள்ள,மாவீரர்களது இலட்சியத்திலே உறுதியுள்ள,குறிப்பாக மனச்சாட்சியுடைய நண்பர்கள் குறைந்தபட்சம் 100 பேருக்கு உண்மையான தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள் ,வேற்றின நண்பர்கள் என்றாலும் நன்மையே,அவர்கள் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் படங்கள் மூலமாகவாயினும் எம் வரலாற்றினை அறிந்துகொள்வார்கள்,
முக்கியமான ஒவ்வோருநாட்டு அரசியல் தலைவர்களுடைய facebook பக்கத்தை like செய்வதன் மூலம் குறைந்த பட்சம் உங்களது profile picture மூலமாவது உங்களது உணர்வைப் புரிந்துகொள்வார்கள் என்பது எனது சிறு நம்பிக்கை,
இதன்மூலம் நாம் அனைத்துச் செயற்பாடுகளையும் முழு மூச்சாகவும் விரைவாகவும் முன்னெடுக்க முடியும்,இலங்கை அரசு 2009 க்கு முன்னரும்,தற்போதும் தமிழீழத்திலே மேற்கொண்டு வரும் இன அழிப்பு நடவெடிக்கைகளை பகிர்வதோடு,புலம்பெயர் தேசத்திலே நடைபெறும் நிகழ்வுகளையும் உங்களுடைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதால்100 பேர் பங்கெடுக்கும் ஒரு நிகழ்வை 10 மடங்காக்கி 1000 பேராக அதிகரித்து அந்தநாட்டு அரசினதும் மக்களினதும் கவனத்தை எமது பக்கம் திருப்பி,எமது பிரச்சனைகளை அவர்களிடம் சென்றடையச்செய்வதன் மூலம் எம் நாட்டுக்கான எமது கடமைகளிலே ஒரு சிறு பகுதியையாவது நிறைவேற்றலாம்.எமது மாவீரர்களது உயிர்த்தியாகங்களும் மக்களது தியாகங்களும்,கனவுகளும்,
தலைவரது கொள்கையும் பொய்த்துப்போகவோ தோற்றுப்போகவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.. எமது அப்பு,ஆச்சி என பரம்பரை பரம்பரையாக நாம் ஆண்டுவந்த எங்கள் மண்ணிலே விதைக்கப்பட்ட எமது மாவீரர்களதும்,மக்களதும் விதைகளிலிருந்து முளைவிட்டு உயிர்பெற்றெழுந்து உணர்வுள்ள தலைவனின் பிள்ளைகளாக தமிழீழமண்ணில் சரித்திரம் படைப்போம்.....

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........