திருச்சி: முன்னாள் அமைச்சர் சிவபதியிடமிருந்து பறிக்கப்பட்ட, திருச்சிபுறநகர் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க, முத்தரையர்சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், முன்னாள்எம்.எல்.ஏ.,வும் களம் இறங்கியுள்ளதால், மாவட்டத்தில் கட்சியினர்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அமைச்சரவையில்அதிக துறைகளை வைத்திருந்த, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தமுன்னாள் அமைச்சர் சிவபதியிடமிருந்து, அமைச்சர் பதவியும், அவர்வகித்து வந்த திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும், சிலநாட்களுக்கு முன் பறிக்கப்பட்டது. சீனியர் அமைச்சர்களை மதிக்காதது,பதவி பறிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.தற்போது அவர் வசம்முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவிமட்டும் ஒட்டிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சிவபதியிடமிருந்து பறிக்கப்பட்ட, திருச்சி புறநகர் மாவட்டசெயலாளர் பதவியை பிடிக்க, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தமுன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏ.,வும் களத்தில்இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில்வரவுள்ள, லோக்சபா தேர்தலை மனதில் கொண்டே, முதல்வர்ஜெயலலிதா, அ.தி.மு.க.,வில் கட்சி பதவிகளை மாற்றி வருகிறார். அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ளமுத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரே, புறநகர் மாவட்டசெயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.ஆகையால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்பிரமணியன், அண்ணாவி, முன்னாள்எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேல் ஆகியோரில் ஒருவருக்குத்தான் வாய்ப்புகிடைக்கும் என்று சூழல் உருவாகியுள்ளது. இதில் கடைசி நேரத்தில்மாற்றம் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அநேகமாக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் மாவட்டசெயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறோம். இவர்களில்,முன்னாள் அமைச்சர்களில் அண்ணாவி, செயல்பாடுகளில் மந்தமானவர்என்பது கட்சித்தலைமை உள்பட, அனைவருக்கும் தெரிந்தவிஷயம்.அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சர்கே.கே.பாலசுப்பிரமணியன், ஒரு ஆண்டுக்கு முன் திடீரென மாவட்டசெயலாளர் பதவியை இழந்தவர். முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி மீது,பெண் டாக்டரை மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளதால்,வழக்கு முடியும் வரை, அவருக்கு பதவி கிடைப்பது சந்தேகம்.அடுத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேலும், மாவட்டசெயலாளர் பதவி ரேஸில் உள்ளார்.ஆனால் அவர், 2001ம் ஆண்டு நடந்தசட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ வேட்பாளர்மல்லிகாவை எதிர்த்து, சுயேட்சையாக போட்டியிட்டார். மேலும், 2006ல்எம்.எல்.ஏ., தேர்தலில், தற்போதைய அமைச்சர் பூனாட்சிக்கு எதிராகமுசிறியில் வேலை பார்த்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆகையால்இவருக்கு வாய்ப்பு குறைவு. மேற்கண்ட முன்னாள் அமைச்சர்கள்மூவரில் ஒருவருக்கே மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் சூழல்உள்ளது.இவர்களைத் தவிர, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுப்பு (எ)சுப்பிரமணியன், ரத்தினவேல் ஆகியோரும் மாவட்ட செயலாளர்பதவியை பிடிக்க முயற்சிக்கின்றனர். கட்சித்தலைமை யாரைநியமித்தாலும், அவர் தொண்டர்களை அரவணைத்துசெல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதே, எங்களின்எதிர்பார்ப்பு.இவ்வாறு அவர்கள் கூறினர்.முதல்வர் ஜெயலலிதாவின்ஸ்ரீரங்கம் தொகுதி வரும், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவியாருக்கு கிடைக்கும் என்பது, திருச்சி மாவட்ட, அ.தி.மு.க.,வினர்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக