22 ஜன., 2013

பட்டுக்கோட்டை கூட்டம்


நண்பர்களே ,அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நமது நண்பர்கள் பட்டுக்கோட்டை கூட்டதிருக்கு கிளம்ப ஆயித்தமாகி கொண்டிருக்கின்றனர் ,நண்பர்கள் வாகனங்கள் மற்றும் ரயில்கள் ,பேருந்துகள் என முன்பதிவுகள் செய்து முடித்து விட்டதாக நண்பர்கள் தகவல்கள் தருகின்றனர் ,மேலும் தங்களின் சுற்றம் மற்றும் உறவுகளையும் அழைத்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் ,அதேப்போல் சிறப்பு விருந்தினர்களும் வருகை தரவுள்ளனர் அவர்களும் தயார் ,பட்டுக்கோட்டை களமும் தயாராக உள்ளது ,நமது நிகழ்ச்சி அமைப்பளார் திரு,ராஜ்குமார் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறார் ,நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளும் கூட்டம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும் ,அதேப்போல் ஆந்திர மாநில முதிராஜ் சங்க நிர்வாகிகள் மூன்று பேரும் கலந்து கொள்கின்றனர் என்பது மேலும் சிறப்பு .
நண்பர்களே மேலும் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி விரைவில் தமிழ்நாடு ,ஆந்திரா ,கர்நாடகா மூன்று மாநில மக்களும் பங்கு பெரும் வகையில் திருப்பதி அல்லது ஹைதராபாத் நகரில் விரைவில் கூட்டம் நடத்த ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது ,அதேபோல் கேரளா சங்க நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம் ,அது குறித்தான அறிவிப்பு விரைவில் உங்களை வந்தடையும் அதற்க்கும் இப்போதே தயாராகுங்கள் அதேப்போல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வேலூர் மாநகரில் திறந்தவெளி மைதான கூட்டதிருக்கான ஆலோசனை நடத்த உள்ளோம் அது திருச்சி சதய விழாவிற்கு பிறகு தேதி முடிவு செய்யப்படும் .
அதேப்போல் அரசுக்கு நமது 15% அரசு வேலை மற்றும் கல்வி இட ஒதிக்கீடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி கோரிக்கை முன் வைத்து மாவட்ட தலை நரகங்களில் ஆட்ச்சிய அலுவலகம் மூலம் மனுக்கள் அனுப்பும் நிகழ்ச்சி மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கலாம் ,இது அனைத்தும் நம் இன சங்க பெரியவர்கள் ஒத்துழைப்போடு நடக்கும் , ஆகவே நம் இன இளைஞர்கள் சிங்கம் போல் அணி திரண்டு வருமாறு இந்த முத்தரைய இணைய குழுமம் வரவேற்கிறது .
ஒன்று கூடுவோம்!! வென்று எடுப்போம்!! மீண்டும் ஆள்வோம் !!

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........