10 ஜன., 2013

திருச்சியில் ரௌடி கழுத்து அறுத்துக் கொலை


திருச்சியில் ரெüடி கனகராஜ் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
 திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.
 மாநகரக் காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) எஸ். செல்வகுமார் மற்றும் போலீஸôர் அப்பகுதிக்குச் சென்று, இறந்த நபரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் 2 செல்போன்களும், மது பாட்டில்களும் கிடந்தன.
 விசாரணையில் இறந்தவர் திருச்சி காஜாமலையைச் சேர்ந்த சுந்தர் மகன் கனகு (எ) கனகராஜ் (23) என்பதும், இவர் கணினி பழுதுநீக்கும் மையத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
 இந்த நிலையில், மன்னார்புரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் திங்கள்கிழமை இரவு கனகராஜூம், காஜாமலை பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு நடந்தது தெரிய வந்தது.
 ஏற்கெனவே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, இருவருக்கும் இடையே தகராறு நடந்து, அதை அப்பகுதியிலுள்ளவர்கள் சமாதானப்படுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தததால், சிவாவும், அவரது நண்பர்களும் சேர்ந்து கனகராஜை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸôர் விசாரிக்கின்றனர்.
 கொலை செய்யப்பட்ட கனகராஜின் பெயர் திருச்சி மாநகர போலீஸôரின் ரௌடிகள் பட்டியலில் உள்ளது. மேலும், இவர் மீது கே.கே. நகர் காவல் நிலையத்தில் 4 அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கெனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைதானவர்.
 இதுகுறித்து கனகராஜின் தந்தை சுந்தர் கூறியது:
 காஜாமலை பகுதியில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்ற கனகராஜ், இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. நண்பர்கள் வீட்டில் இருக்கலாம் எனக் கருதினேன்.
 ஆனால் செவ்வாய்க்கிழமை காலையில் எனது மகன் சடலமாக கிடப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது என்றார்.
 இக்கொலை குறித்து கே.கே.நகர் போலீஸôர் சிவா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........