21 ஜன., 2013

விவசாயிகள் தற்கொலை :


தமிழக அரசுக்கு நோட்டீஸ்

//விவசாயிகள் தற்கொலை செய்வது கொள்வது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பா சாகுபடி பாதித்ததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறா வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஜி. ராஜேந்தரன் என்ற வழக்குரைஞர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், விவசாயிகள் தற்கொலை என்பது பொய்யான தகவல். சொந்த காரணங்களாலும், குடும்ப பிரச்னை காரணமாகவும் தற்கொலை செய்து கொள்பவர்களை, பயிர் சாகுபடி பாதித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தவறான தகவல்கள் பரபரப்பபடுகின்றன என்று கூறியிருந்தது.

இந்த பதில் மனுவை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதில், விவசாயிகள் தற்கொலையை அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ளது. எனவே டெல்டா விவசாயிகளின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுருந்தார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனு மீது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த வாரம் புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. // - தினமணி செய்தி

##தண்ணீர் இன்றி சோகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலையை அரசு மூடி மறைக்க விவசாயிகள் தற்கொலை என்பது பொய்யான தகவல். சொந்த காரணங்களாலும், குடும்ப பிரச்னை காரணமாகவும் தற்கொலை செய்து கொள்பவர்களை, பயிர் சாகுபடி பாதித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தவறான தகவல்கள் பரபரப்பபடுகின்றன என்று கூறும் மாநில அரசு இதை போல நாளை அணு உலை விபத்து ஏற்பட்டால் அதில் இறந்தவர்கள் எல்லாம் மர்ம காய்ச்சல் தலைவலி இறந்தார்கள் என்று அப்பொழுது இதை போல முடிமறைக்கும் வேலையை மாநில அரசு மதிய அரசு ரெண்டும் சேர்ந்து செய்யும்.. சகோதரி செங்கொடி தற்கொலையை காதல் தோல்வி தற்கொலை என்று கூறிய மனம் கேட்ட பத்திரிகைகள்,மக்கள் உள்ள தமிழகம் தானே இது :(##

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........