8 நவ., 2012

முத்தரையர் கோட்டை


முத்துப்பேட்டையை சுற்றிலும் சுமார் பதினோரு கிராமங்களில் நாம் அருதி பெரும்பான்மையுடன் வாழ்கிறோம் எனக்கு தெரிந்த விவரப்படி .ஆனாலும் எழுபதுகளுக்கு முன் யாரும் எந்த அரசியல் சார்ந்த பொறுப்புகளையும் வகித்ததாக தெரியவில்லை .
மறைந்த .திரு .வீ .நடேசன் அவர்களை தவிர ,அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் ,ஆலங்காடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்து உள்ளுரில் கோலோச்சி வந்த பார்ப்பன பண்ணையாராலும் ,சுற்று வட்டாரத்தில் செல்வாக்குடன் இருந்த தேவர் இனத்தவராலும் நிகழும் கொடுமைகளுக்குஎதிராக பொதுஉடமை இயக்கத்தின் துணையோடு போராடினாலும் முழு தீர்வை எட்ட முடியாமல் இருந்துள்ளனர். பின்னர் 1971 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் ஒன்றியப்பெருந்த்லைவர் பொறுப்பிற்கு பொதுஉடமை இயக்கத்தின் சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார் .இவர் பொறுப்பு வகித்த காலத்தில் குறிப்பிடத்தக்கவை ஒரு சில ஆலங்காடு தொடக்கப் பள்ளியை ,நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தியது ,பேட்டையில்(புதுக்கோட்டகம் சாலை) சாலை வசதியில்லாமல் அவதி பட்ட நம் இனத்தவருக்கு சாலை அமைத்து கொடுத்தது, கற்பகநாதர் குளம் பகுதியில் படித்து இருந்த நம் சமுதாய இளையோர்களை ஆசிரியர்களாக பனி நியமனம் செய்தது .இவருக்குப்பிறகு நம் இன வாக்குகள் பெரும்பான்மையாக இருந்தாலும் அடுத்து நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை .ஊராட்சி மன்ற தலைவராக ஆலங்காடு .திரு A . சந்திரன் போன்ற ஒரு சிலரே இருந்தனர் .மற்றைய கிராமங்களில் தேவர் இனத்தவரே நம் மக்களின் வாக்குகளை கொண்டு பதவி வகித்தனர் .இன்று நம்மவர்கள் பெரும்பாலும் வகித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பே பெரிய கனவாக இருந்துள்ளது .நம்மவர்கள் யாரும் தேவர் இனத்தவரை மீறி தேர்தல்களை சந்திக்க முடியவில்லை .கடும் மிரட்டல்களும் ,சில படுகொலைகளும் நம் மக்களை அச்சம் கொள்ள வைத்தது .அந்த காலகட்டத்தில் காரணம் தெரியாமல் இறந்தவர்களும் ,காணாமல் போனவர்களும் உண்டு .
இந்நிலையில் 1980 களில் முத்தரையர் சங்கம் இந்த பகுதியில் கவனம் செலுத்த தொடங்கியது .இதற்க்கு முன்னோடியாகவும் ,முழு காரணமாகவும் இருந்தவர்கள் .
ஆலங்காடு .திரு .எல் .எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் .முத்துபேட்டை பகுதியில் சங்கம் செயல்பட பல மிரட்டல்களுக்கும் .அடக்குமுறைகளுக்கும் ஆனாலும் மிக தைரியமாக எதிர்கொண்டவர் .நம் கிராம பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியவர் .ஆனாலும் வெகு சிலரே முத்தரையர் சங்கத்தில் தீவிர கவனம் செலுத்தியவர்கள் .பேட்டை .திரு கா .கதிரேசன் ,திரு .கா.சுப்பிரமணியன் .திரு இராஜகோபால்,ஆலங்காடு மேகநாதன் ,உப்பூர் தமிழழகன் (தற்போது வழக்கறிஞர் ) பின்னத்தூர் பிச்சைக்கண்ணு ஆசிரியர் ,மன்னங்கோட்டகம் ராஜாராம் , கரையங்காடு மனோகரன், கற்பகநாதர் குளம் ராமலிங்கம் ,மற்றும் ரவிச்சந்திரன் ஆசிரியர் ,தில்லைவிளாகம் கல்யாணசுந்தரம் ,போன்றோர்களே எனக்கு தெரிந்த வகையில்..பல சமயங்களில் திருச்சி ,திரு மாணிக்கம் ,திரு அம்பலத்தரசு ,திரு வேங்கடசாமி, திரு LION ஜெயபால் ,திரு .பொன் .முருகையன் ஆகியோர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டங்கள் ,திரு ,எல் .எஸ் .பி .அவர்களால் அடிக்கடி நடத்தப்பட்டது. சில திருமண விழாக்களுக்கு .அப்போதைய தலைவர் திரு .ஆன்டியப்பன் அவர்களையும் ,மறைந்த .ஆலங்குடி திரு .வெங்கடாசலம் அவர்களையும் தலைமையேற்க வைத்து மக்களுக்கு சங்கத்தின் மீது நம்பிக்கையை கொண்டுவந்தனர் .இந்த நடவடிக்கைகளினால் எரிச்சலடைந்த தேவர் இனத்தை சார்ந்தவரும் அரசியலில் மேல்மட்டத் தொடர்புடையவரும் ,அப்போதைய சாராயக்கடை அதிபர் .திரு க .ப .சொக்கலிங்கம் அவர்களின் கூட்டத்தால் இரவோடு இரவாக ஆலங்காடு தாக்கப்பட்டது .நம்மவர்களின் வீடுகளும் ,வாகனங்களும் ,சேதம் அடைந்தன .வந்தவர்களில் ஒருவர் உயிர் இழந்தார். ஆனால் காவல் துறையால் 144 தடை உத்தரவு போடப்பட்டு பொது மக்கள் அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டனர் .பின்னர் நீதி மன்றத்தில் சரணடைந்த ,திரு எல் .எஸ்.பி .உட்பட்ட ஒன்பது நபர்களும் பிணை மறுக்கப்பட்டு ,ஏழு மாத காலம் கடலூர் சிறை வாசத்திற்க்குப்பின்னால் ,தி .மு.க .திரு .தமிழ்செல்வம் ,அ .தி.மு.க.திரு சேகர்.,சி .பி .ஐ .திரு மார்க்ஸ் ,திரு சந்திரசேகர ஆசாத் ,திரு N .சுப்பிரமணியன் ஆகிய நம் இன அரசியல் பிரமுகர்களின் கடும் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர் .இந்த சம்பவதிர்க்குபிறகு சங்கம் வேகமாக பரவத்தொடங்கியது .உப்பூர் குமாரவேல் ,கழுவன்காடு,ராஜ்குமார் போன்றோர் சங்கத்தில் இணைந்தனர் .1996 இல் நம் இளையோர்களுக்கும் தேவர் இன இளையோர்களுக்கும்வீரன்வயல் பகுதியில் உண்டான சிறு பகையில் ,இரவில் ஆள் தெரியாமல் நம்மவர் என நினைத்து ,நாடார் இன அன்பழகன் படுகொலை செய்யப்பட்டார் .குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை .திரு எல்.எஸ்.பி .அவர்களின் தலைமையில் நடந்த சாலை மறியலுக்கு பிறகே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.ரூ 19000. நாடார் குடும்பத்திற்கு சங்கத்தின் மூலம் நிதி உதவியும் செய்யப்பட்டது .1997 இல் ஆலங்காட்டில் பண்ணையார் நிலத்தில் காலங் காலமாக குடியிருந்த நம்மவர்கள் எந்த ஒரு பிரதி பலனும் இன்றி வெளியாக்கப்படனர் .இதிலும் திரு .எல் எஸ்.பி .மீது வழக்கு ,இவரின் செல்வாக்கு மக்களிடையே உயர்வதை கண்ட அரசியல் கட்சிகள் பலவும் அழைப்பு விடுத்தன .ஆனால் ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு சிங்கம் சின்னத்தில் ,திரு வீரபத்திரன் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடத்தினை பெற்று நமது வாக்குகளின் எண்ணிகையை அரசியல் கட்சிகளுக்கும் .மற்ற சமூகத்தாருக்கும் உணர்த்தினார்.பிறகு மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்து எடுக்கும் முறை இல்லாமல் போய்விட்டது .ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக சுயேட்சையாக ஒரு முறை தேர்ந்து எடுக்கப்பட்டார்

பேட்டையின் பெருமகனார் .திரு.கா.கதிரேசன்.அவர்கள் .எங்களது ஊரில் நமது சமுதாயத்தில் முதல் பட்டதாரி .அனைத்து இன சமூகத்தாரிடம் நல்ல அணுகுமுறையும் ,மதிப்பும் கொண்டிருந்தவர் .ஊருக்கு ஒரு மகுடமாய் விளங்கியவர் .அண்ணன் அவர்கள் .1972 க்கு முன்பு வரை தம்பிக்கோட்டை மைனர் பண்ணையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ,ஆவுடையார் கோவிலுக்கு சொந்தமான சுமார் 66 ஏக்கர் நிலப்பரப்பில் நம்மவர்களே குடியிருந்தனர் ஆனால் அனுபவிக்கும் உரிமை கிடையாது அதில் இருந்த தென்னை மரங்கள் நம்மவர்களால் நடப்பட்டது .தேவர் இனத்தவரின் அடக்குமுறைகளுக்கும மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருந்த நம் மக்களை எண்ணி ,அதை உடைத்தெறிய புறப்பட்டார் அண்ணன் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சில பெரியவர்களின் துணையோடு திருவாடுதுறை ஆதினம் அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கினார்,இதைக்கேட்ட ஆதீனம் அவர்கள் குடியிருந்து மரம் நட்ட உங்களுக்கே அனுபோக உரிமை தருகிறேன் என்று ஒப்பந்த பத்திரம் எழுதிவிட்டார்கள் .இதனை கேள்விப்பட்ட ஆதிக்க சக்திகள் கடும் சினம் கொண்டனர் .அண்ணனை பல வகையிலும் மிரட்டினர் ,தென்னந்தோப்புகளில் தேங்காய் வெட்டவந்தவர்களை நம்மவர்கள் விரட்டியடித்தனர் .அதுமுதல் அவரை போற்றத்தொடங்கினர் நம் மக்கள் .அவர் சார்ந்து இருந்த தி .மு .கவில் ,ஒன்றியப்பிரதிநிதி ,மாவட்ட பிரதிநிதி ,மாவட்ட விவசாய அணித்தலைவர் ,மற்றும் கோவிலூர் ,பேட்டை ,ஆகிய ஊர்களில் உள்ள இந்து அறநிலயதுறை திருகோவில்களின் அறங்காவலராக பதவி வகித்துள்ளார் .அண்ணன் மறைந்த நாளன்று மாவட்டத்தில் உள்ள தி.மு.க.பொறுப்பாளர்களும் ,மக்கள் பிரதிநிதிகளும் அணைத்து கட்சி ,மத சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.அவரது இடத்தை இதுவரை யாராலும் நிரப்பமுடியவில்லை .

அவரது கல்வி சான்றிதழில் முத்துராஜா என்று குறிப்பிட்டு இருந்த காரணத்தால் தான் பார்த்து வந்த நிலவள வங்கி நிர்வாகி ,வேலை பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.சிவகுமார் பரமசிவம்
திரு. மாறன்

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........