27 ஜன., 2012

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சமூக, கல்வி, பண்பாட்டுத் திங்கள் இதழ்


பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சமூக, கல்வி, பண்பாட்டுத் திங்கள் இதழ்

வெள்ளி, 10 ஜூன், 2011

                                      முத்தரையர் சமூகத்தைப் பற்றியும் அவர்களின் தற்போதைய நிலை பற்றியும் மிக விரிவாகவும் தெளிவாகவும் மக்களிடையே எடுத்துச் சொல்லி வருகிறது " பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சமூக, கல்வி, பண்பாட்டுத் திங்கள் இதழ்". இந்த இதழ் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வெளிவருகிறது.
                                       இந்த இதழின் ஆசிரியர் திரு இரா. திருமலைநம்பி அவர்களும் இதன் பதிப்பாசிரியர் திரு பு.சி.தமிழசரசன் அவர்களும் இந்த சமுதாய மக்களுக்காக பல காலமாக உழைத்து வருகிறார்கள்
                                     மாவட்ட சங்கத்தின் மூலமாக வெளிவரும் இந்த இதழ் முத்தரையர் சமுதாய மக்களின் தற்போதைய கல்வி, பொருளாதாரம், அரசியல் நிலைப் பற்றி ஒவ்வொரு மாதமும் விரிவாக தொகுத்தளிக்கிறது. இம்மக்களுக்காக உழைத்த பெருந்தகையாள்ர்களைப் பற்றியும், தற்போது தொண்டாற்றி வரும் தலைவர்கள் பற்றியும் படங்களுடன் செய்திகளை வெளியிடுகிறது.     

26 ஜன., 2012

அனுமதியின்றி முத்தரையர் சிலை: எஸ்.பி. ஆலோசனை First Published : 24 May 2010 12:39:06 PM IST

ராமேசுவரம், மே 23: ராமேசுவரத்தில் அருகே அனுமதியின்றி பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கப்பட்டது குறித்து மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) ராஜசேகரன் அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
  ராமேசுவரம் அருகே ஏர்க்காடு கிராமத்தில் வசிக்கும் சமூகத்தினர் சனிக்கிழமை இரவு பெரும்பிடுகு முத்தரையரின் 5 அடி உயர சிலையை திறந்துவைத்து பூஜை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராமேசுவரம் தாசில்தார் ராஜேந்திரன், டி.எஸ்.பி. கமலாபாய் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்கு விரைந்துசென்றனர்
 அங்குள்ள கிராமப் பிரமுகர்களிடம் அனுமதியின்றி சிலை நிறுவக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலை குறித்து ராமநாதபுரம் கோட்டாசியர் இளங்கோ, கூடுதல் போலீஸ் எஸ்.பி. சூரியபிரகாஷ் மற்றும் போலீஸôர் ஏர்க்காட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கிராம முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் நடக்கும் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தமுடியாமல் போனது. இதன்பின்னர் அதிகாரிகள் உத்தரவின்படி சிலையை துணியால் சுற்றி மூடிவைத்தனர்.
  பின்னர் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேசுவரம் தாசில்தார் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி. ராஜசேகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில்
கோட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி., தாசில்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 இக் கூட்டத்தில் அரசின் அனுமதிபெறும் வரை சிலையை திறக்கவேண்டாம் என அறிவுறுத்தியதாகவும்; இதுகுறித்து கிராமப் பிரமுகர்களிடம் செவ்வாய்க்கிழமை ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

முத்தரையர் என்னும் பெயர் வாய்ந்த பண்டைக் குலம் ஒன்று பழந் தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றது

      “மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
      மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே”
என்று தேவாரத்திற் பாடப்பெற்ற மழபாடி என்னும் ஊர் மழவரால்
உண்டாக்கப் பட்டதாகும். மழவர் பாடி என்பது மழபாடியாயிற்று.5

     திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின்
வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை
நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர்
பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி
அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங்
கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.6

     இன்னும், தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவன்
பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது
செங்கற்பட்டு நாட்டில் தென்னேரியாக விளங்குகின்றது.7

     முத்தரையர் என்னும் பெயர் வாய்ந்த பண்டைக் குலம் ஒன்று பழந்
தமிழ் நூல்களிலே பேசப்படுகின்றது. அவரும் சிறந்த படைவீரராக
விளங்கினார். அக்குலத்தைச் சேர்ந்த வள்ளல்களின் பெருமையை நாலடியார்
என்னும் பழைய நீதி நூல் பாராட்டுகின்றது. அன்னார் குணநலங்களை
வியந்து, “முத்தரையர் கோவை” என்ற நூலும் இயற்றப்பட்டதாகத்
தெரிகின்றது.8 சாசனங்களில் சத்துரு பயங்கர முத்தரையன், பெரும் பிடுகு
முத்தரையன்  

முதலியோரின் வீரச் செயல்கள் குறிக்கப்படுகின்றன. இராமநாதபுரத்திலுள்ள
முத்தரசன் என்னும் ஊரும், தஞ்சை நாட்டிலுள்ள முத்தரசபுரமும் திருச்சி
நாட்டிலுள்ள முத்தரச நல்லூரும் அக்குலத்தாரது பெருமையைக்
காட்டுவனவாகும். 
 

ராமேசுவரத்தில் பெரும் பிடுகு முத்தரையர் படம் அவமதிப்பு: மறியலில் ஈடுபட முயற்சி Ramanathapuram ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12, 3:40 PM IST


ராமேசுவரம், ஜூன். 12-
 
ராமேசுவரம் அடுத்த கரையூரில் முத்தரையர் சங்கம் சார்பில் பெரும் பிடுகு முத்தரையர் படம் வரைந்த போர்டு வைக்கப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு “மர்ம” ஆசாமிகள் யாரோ பெரும் பிடுகு முத்தரையர் படத்தை அவமதித்திருந்தனர்.
 
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமா னோர் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து கிராம தலைவர் மலைராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலை மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
 
இந்நிலையில் இன்று காலை முத்தரையர் படத்தை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவலறிந்த ராமேசுவரம் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை யடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி & முசிறி வட்டத்தில் கோட்டூர் அண்ணாநகர் என்ற இடத்தில் தலித்துக்கள் தார் சாலையில் பிணம் தூக்கிச் செல்ல அனுமதிக்க முடியாது என்று முத்தரையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கூறினார்கள்.


Vizhippunarvu Logo
அக்டோபர் 2008
வழக்கறிஞர் பொ.ரத்தினம் & நேர்காணல்

ஏழை எளிய மக்களின் மனித உரிமைகளையும், குடி உரிமைகளையும் சட்டத்தின் துணை கொண்டு காப்பாற்றப் போராடி வரும் வழக்கறிஞர்கள் ஒருவர் பொ.ரத்தினம் தீண்டாமை வன்கொடுமைக் குற்றங்களை கேள்விப்பட்டவுடன் தானாகவே வலியச் சென்று பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு பேசி, களப்பணியாற்றுவதுடன் வழக்கையும் தானே ஏற்று நடத்தி வரும் அரிய மனிதர். மேலவளவுப் படுகொலை, சென்னகரம் பட்டிப் படுகொலை, திண்ணியம் வன்கொடுமை, கண்ணகி&முருகேசன் படுகொலை போன்ற முக்கியமான படுகொலை வழக்குகளை நடத்தும் போது, சாதிவெறியர்களின் கொலை மிரட்டலைச் சந்தித்த போதிலும், தனது பணியில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் மக்களுக்காகப் பணியாற்றி வரும் போற்றுதலுக்குரிய வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து ‘சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம் ‘என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். தனது நெடிய களப் பணி அனுபவத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சந்தித்து வரும் அனைத்து வகை சவால்களையும் எதிர்கொண்ட அவரிடம் உரையாடினோம். அதிலிருந்து!

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியலின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்கும் நோக்கில் காவல்துறையினரும் நீதித்துறையினரும் செயல்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது?

மனித உயிரை நேரடியாகக் கையாளும் அதிகாரம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்பார் புரட்சியாளர் அம்பேத்கர். அத்தகைய பொறுப்பு வாய்ந்த துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் கூட தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை காவல்துறையினர் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர். நீதிபதிகளோ அந்தச் சட்டத்தை ஒன்றுமில்லாததாக்கப் பல நூதனமான வழிகளைக் கையாண்டு வருகிறார்கள். படுகொலை வழக்குகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி முன் ஜாமீன் வழங்கக் கூடாது.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு போட்டால், நீதிபதிகள் தள்ளுபடி செய்யாமல் கீழ் நீதிமன்றத்திற்கு ஒரு Direction (குறிப்பாணை) தருகிறார்கள். முன்ஜாமீன் கேட்டவரை, கீழ் நீதிமன்றத்தில் மனுப் போடுமாறு அறிவுரை கூறுகின்றனர். அவர் மனுப் போடப் போகும் கீழ் நீதிமன்றத்திற்கு ஒரே நாளில் ஜாமீன் மனு மீது தீர்ப்பளிக்க வேண்டும் என்று குறிப்பாணை அனுப்புகின்றனர். அதைப் பார்த்த கீழ்நீதிமன்ற நீதிபதி ‘நமக்கு ஏன் வம்பு’ என்று பயந்து உடனே ஜாமீன் வழங்கி விடுகிறார்கள். இது போன்ற குறிப்பாணைகளைத் தலித் சமூகத்தைச் சார்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளே வழங்குகிறார்கள் என்பதுதான் வேதனையானது.

காவல் துறையினரைப் பற்றி சொல்லவே வேண்டாம். முழுக்க முழுக்க குற்றவாளிகளுக்குச் சாதகமான மன நிலையிலிருந்து அவர்கள் இன்றுவரை மாறவில்லை. அதற்குக் காரணம் காவல் துறையினரின் சாதி உணர்வுதான். அந்த தீய உணர்விலிருந்து அவர்களை மீட்பதற்கு அரசு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அந்த தீய சாதி உணர்வுக்கு, மாவட்டக் கண்காணிப்பாளர்கள் போன்ற உயர் அதிகாரிகள் கூட தலை வணங்கிப் போகிறார்கள்.

அண்மையில் திருச்சி & முசிறி வட்டத்தில் கோட்டூர் அண்ணாநகர் என்ற இடத்தில் தலித்துக்கள் தார் சாலையில் பிணம் தூக்கிச் செல்ல அனுமதிக்க முடியாது என்று முத்தரையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கூறினார்கள். அந்த தார்சாலை அரசுக்குச் சொந்தமானது. எல்லா வாகனங்களும் போய் வருகின்றன. ஆனால் தலித்துகள் மட்டும் அந்த வழியில் பிணம் தூக்கிக் கொண்டு செல்லக் கூடாது என்று கூறினார்கள். திருச்சி மாவட்ட கண்காணிப்பாளரே, தலித் மக்கள் தார் சாலையில் பிணத்தைத் தூக்கிச் சென்றுவிடாதபடி காவல் காத்தார். தார்சாலைக்கு அருகில் உள்ள மண் பாதையில்தான் பிணத்தைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்ற சட்ட விரோதமான சாதி ஆதிக்கத்திற்குத் துணை போயுள்ளார் அவர்.

பிணத்தை ஏற்றிச் சென்ற ‘ஆம்புலன்ஸ்’ வாகனத்தை கூட மண்பாதையில் ஓட்டிச் சென்றுள்ளனர். இது போன்ற தீண்டாமை கருத்தியலுக்கு மாவட்ட காவல்துறை அதிகாரியே துணை போனால், காவல்துறை கீழ் அதிகாரிகள் எந்த அளவிற்கு போவார்கள். நியாயமான முறையில் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே காவல் துறையினருக்கு வருவதில்லை. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனை என்றால் அவர்களுக்கு சாதி வெறியுணர்வு தீவிரமடைகிறது.

இந்த சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டுமானால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முற்றிலும் மத்திய புலனாய்வு மற்றும் காவல் படைகளிடம் ஒப்படைப்பது சிறந்த வழியாக இருக்குமா?

இருக்கலாம். அதை ஒரு மாற்று வழியாக நாம் யோசிக்கலாம். ஆனால் சிபிஐ கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மிக அலட்சியமாகவே கையாளுகிறது. உதாரணத்திற்கு கண்ணகி & முருகேசன் கொலை வழக்கில், முருகேசன் சித்தப்பாவை 4வது குற்றவாளியாகச் சேர்த்தனர். அதற்கு என்ன தேவை இருக்கிறது? பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சேர்ப்பதன் மூலம் இரு தரப்பினரும் தங்களுக்குள் பஞ்சாயத்து செய்து, வழக்கை ரத்து செய்யத் துண்டுவதுதான் அதன் நோக்கம். இந்த வேலையைத்தான் ‘லோக்கல் போலீசு’ செய்து வருகிறது. சிபிஐயிலும் கூட சாதி உணர்வாளர்கள்தானே அதிகாரிகளாக இருக்கிறார்கள். யாரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தாலும், அந்த அதிகாரத்தைப் பெற்றவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமே!

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், அந்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்றும் சில சாதி இந்து அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றனவே!

அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது. பேராசிரியர் கல்யாணி, வழக்குரைஞர் லூசி போன்றவர்கள் மீது கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தோழர் லூசி மீது குற்றப் பத்திரிக்கையே தாக்கல் ஆகிவிட்டது. பிறகு நாங்கள் தலையிட்டு, இழப்பீடும், தவறுதலாக பழி சுமத்திய தலித் பெண்ணிற்கு ரூ.5,000/- அபராதம் பெற்றுத் தந்தோம். இதுபோல மேலும் சில வழக்குகள் உள்ளன. ஆனால் பொய் வழக்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டும் நடைபெறவில்லை. எல்லாச் சட்டத்தின் கீழும் அத்தகைய தவறுகள் நடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம், காவல்துறையினர்தான். பொய் வழக்குப் பதிவு செய்யும்படி வற்புறுத்துகின்றனர். பல இடங்களில் தூண்டி விடுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களாகச் சென்று யார் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்வதில்லை. தங்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளைக் காவல் நிலையம் வரை சென்று வழக்குப் பதிவு செய்யத் துணிவற்றவர்களாகத்தான் தலித் மக்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் தலித்துகள் பொய் வழக்குப் பதிவு செய்வது என்பது சாத்தியமற்றது. ஆனால், பொய் வழக்குப் பதிவு செய்யும்படி காவல் துறையினராலும், அவர்கள் பணிபுரியும் ஆண்டைகள்/முதலாளிகள்/ ஆதிக்க சாதியினர்/ அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரால் தூண்டிவிடப்படுகிறார்கள். வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்களாகத் திட்டமிட்டு பொய் வழக்குகளைப் பதிவு செய்வதில்லை. நிலைமை இவ்வாறிருக்க, சட்டத்தைத் திரும்பப் பெற கோருவது உள்நோக்கமுடையது. சட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கும் காவல் துறையினரே அத்தனைக் கேடுகளுக்கும் பொறுப்பானவர்கள்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தலித் மக்கள் எந்தளவிற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்?

அந்தச் சட்டத்தைப் பற்றி தலித் மக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. தலித் அமைப்புகள், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. வன்கொடுமை நடந்தவுடன் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போடுகிறார்கள். ஆனால் அந்த வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? புலன் விசாரணை நடந்ததா? இழப்பீடு வழங்கப்பட்டதா என்று கண்காணிப்பதில்லை. கட்டை பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வழக்கைச் சிதைப்பதற்குத் துணை போகிறார்கள். அதுவே மேலும் மேலும் வன்கொடுமைகள் நடக்கும் சூழலை அதிகரித்துவிடுகிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்துக்களைப் பேசும் தலித் அல்லாதார் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளைக் குலைக்கும் நேரத்தில் செயல்படுகின்றனர். கண்ணகி & முருகேசன் கொலை வழக்கை கைவிடும்படி புலவர் கலியபெருமாள் மகன் வள்ளுவர் பலமுறை எனக்கு தொலைபேசி செய்து பேசினார். சட்ட நடவடிக்கைகளில் தலையிட்டு கட்டை பஞ்சாயத்து செய்யும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி எச்சரிக்கை செய்தேன். இவ்வாறு அந்தச் சட்டத்தை ஒழிக்க பல பேர் முயற்சிக்கிறார்கள்.

சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

தீவிரமாக கண்காணித்துச் செயல்படும் மக்கள் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். தலித்துகளும் தலித் அல்லாத சமூக நல ஆர்வலர்களும் இணைந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு வழக்கை கண்காணிக்க வேண்டும். தலித் அமைப்புகள் தங்களின் சட்டக் குழுக்களைப் பலப்படுத்த வேண்டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கென்று தலித் அமைப்புகளில் தனி துணை நிலை அமைப்புகள் உருவாக்கப்பட்டு, எல்லா கிராமங்களிலும் கண்காணிப்பு செய்யப்பட்டால் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

தமிழக போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சி SUNDAY, 13 JULY 2008 20:36 HITS: 1733 SECTION: புதிய ஜனநாயகம் - 2008

 மக்கள் போராட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவுவதும், முன்னணியாளர்களைப் பழிவாங்குவதும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் வாடிக்கை. அதிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரிசா, சட்டிஸ்கர் மாநிலங்களே இதற்கு இரத்த சாட்சியங்களாக உள்ளன. உழைக்கும் மக்களின் போராட்ட நிர்பந்தத்தால், தற்காலிகமாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, போராடிய மக்களை எப்படியெல்லாம் பழிவாங்கி ஒடுக்குவார்கள், போராட்ட ஒற்றுமையை எப்படியெல்லாம் சீர்குலைப்பார்கள் என்பதற்கு தமிழகம் புதிய சாட்சியமாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில், மதுரை மாவட்டம் வலையங்குளம்  எலியார் பத்தி முதலான கிராமங்களில் போலீசும் அதிகார வர்க்கமும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலே இதை நிரூபித்துக் காட்டுகிறது.

 மதுரை  தூத்துக்குடி நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகில் உள்ள  வலையங்குளம், எலியார்பத்தி, பாறைப்பத்தி, சோளங்குருணி ஆகிய கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தி சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஒப்பீட்டு ரீதியில் பின்தங்கிய பகுதியாக இக்கிராமங்கள் நீடித்த போதிலும், இக்கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு விவசாயமே வாழ்வுக்கான ஆதாரமாக உள்ளது. நிலக்கடலை, வாழை, காய்கறிகள், தென்னை, சப்போட்டா, நெல்லி முதலானவற்றோடு மல்லிகை இங்கு பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

 இந்த விளைநிலங்களை தரிசு நிலங்கள் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) மூலம் நிலங்களைக் கையகப்படுத்தி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவத் துடிக்கிறது. நிலங்கள் பறிக்கப்பட்டால் தமது எதிர்கால வாழ்வே இருண்டு விடும் என்பதை உணர்ந்த இவ்வட்டார சிறு விவசாயிகள் சங்கமாக அணிதிரண்டு போராடத் தொடங்கினர். விவசாயிகளின் போராட்டத்தைத் துச்சமாக மதித்த அரசு, விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான குறிப்பாணைகளை விவசாயிகளுக்கு அனுப்ப ஆரம்பித்தது. வெகுண்டெழுந்த விவசாயிகள் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

 கடந்த ஆறு மாதங்களாக, நிலங்களைக் கையகப்படுத்தத் துடிக்கும் அரசின் முயற்சிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பெறவும், அன்றாடம் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலைமறியல் முதலான போராட்டங்களில் ஈடுபட்டும், பல்வேறு அமைப்புகள்  இயக்கங்களிடம் ஆதரவு திரட்டியும் இக்கிராமங்களின் விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்தி தொடர்ந்து போராடினர்.
 விவசாயிகளின் போராட்ட உறுதியைக் கண்ட மாவட்ட ஆட்சியர், வேறு வழியின்றி 2.5.08 அன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். விவசாய சங்கப் பிரதிநிதிகளோடு மனித உரிமை பாதுகாப்பு மையம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்களும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறிய மாவட்ட ஆட்சியரான எஸ்.எஸ்.ஜவகர், போராட்டங்களைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று விவசாயிகளை எச்சரித்தார். இக்கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அரசு அறிவித்தது.

 விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தால் கிடைத்த இந்த முதற்கட்ட வெற்றியின் மகிழ்ச்சியை இக்கிராம மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்குள்ளாகவே, இடியென இறங்கியது போலீசு அடக்குமுறை. 6.5.08 முதலாக இக்கிராமங்களில் சாதிக் கலவரம் மூண்டு வன்முறை பெருகியதாகவும், அதைத் தடுக்கச் சென்ற போலீசாரை கிராம மக்கள் தாக்கி போலீஸ் ஜீப், மோட்டார் சைக்கிள்களைத் தீயிட்டுக் கொளுத்தியதாகவும், பல போலீசார் படுகாயமடைந்ததாகவும் நாளேடுகள் செய்திகள் வெளியிட்டன.

 அதைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒருவார காலத்துக்கு இக்கிராமங்களைச் சுற்றி வளைத்து போலீசார் வெறியாட்டம் போட்டனர். ஆளுயர தடியுடன் வந்திறங்கிய கூடுதல் போலீசுப்படை வீடுவீடாகப் புகுந்து தாக்கத் தொடங்கியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கூட கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். பள்ளிகல்லூரிகளில் படிக்கும் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்துப் போராடிய விவசாய சங்கத் தலைவர்களைக் குறிவைத்து போலீசுப் படை வீடு வீடாகத் தேட ஆரம்பித்ததால் அவர்கள் தலைமறைவாகித் தப்பியோடினர். அவர்களை ஒப்படைக்கும்படி குடும்பத்தாரை போலீசு வதைத்தது. இரவு நேரங்களில் திடீரென கிராமங்களில் புகுந்து தாக்கி அச்சுறுத்திய போலீசு, கிராம மக்களின் உடமைகளை நாசப்படுத்தி வெறியாட்டம் போட்டது. உண்மை நிலைமை அறிய இக்கிராமங்களுக்கு சென்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் செயல்வீரர்களை ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தது.

 சாதி வேறுபாடுகளைக் கடந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய இக்கிராமங்களில் சாதிக் கலவரம் ஏன்? ஏற்கெனவே இக்கிராமங்களில் சாதியப் பகைமையும் மோதல்களும் நடந்துள்ளனவா? இல்லை. இது சாதிக் கலவரமில்லை; சிறு வாய்த் தகராறையே ஊதிப் பெருக்கி சாதிக் கலவரமாகச் சித்தரித்து, போலீசும் அதிகார வர்க்கமும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிய மக்களைப் பழிவாங்கவே திட்டமிட்டு இக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளன. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (ஏகீகஇ) உண்மையறியும் குழுவினர் இக்கிராமங்களுக்கு நேரில் சென்று நடத்திய விசாரணையின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.

 எலியார்பத்தி கிராமத்தில் கடந்த 4.5.08 அன்று டீக்கடை ஒன்றில் போதையில் இருந்த இரண்டு பேருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, அவ்வூர் பெரியவர்களால் சமரசம் செய்து தீர்க்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சிறுபான்மையாகத் தாழ்த்தப்பட்டோரும் பெரும்பான்மையாக வலையர்கள் எனப்படும் பெரும்பிடுகு முத்தரையர் சாதியினரும் உள்ளனர். சாதிய இழிவு நீடித்தபோதிலும், இருதரப்புக்குமிடையே தகராறுகளோ மோதலோ நடந்ததில்லை. டீக்கடையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு தீர்க்கப்பட்ட போதிலும், முத்தரையர் சாதி சங்கத் தலைவர் இராசு தலைமையில் சில இளைஞர்கள் தலித் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை சேதப்படுத்தினர். அவர்கள் மீது சிறுத்தைகள் கட்சியினர் கூடக்கோவில் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்க, அதனடிப்படையில் முத்தரையர் சாதியைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அடாவடிகளும் போலீசு நிலையத்தில் வழக்கு பதிவு செய்தலும் தமிழகமெங்கும் தொடர்கின்றன. ஆனால் போலீசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வழக்குத்துக்கு மாறாக, எலியார் பத்தியில் அன்றிரவே பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 மறுநாள் காலை, எலியார்பத்தி கிராம நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரும்பிடுகு முத்தரையர் உருவம் பொறித்த போர்டுக்கு செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து எலியார் பத்தியிலும் அதைச் சுற்றியுள்ள பாறைப்பத்தி, சோளங்குருணி, நெடுமதுரை, வலையப்பட்டி, வலையங்குளம் கிராமங்களிலும் முத்தரையர்கள் சாலை மறியல் செய்தனர். உடனே மதுரை மாவட்ட போலீசுத் துறை கண்காணிப்பாளர், தென்மண்டல போலீசுத் துறை இயக்குனர், துணை கண்காணிப்பாளர்கள் என போலீசு உயரதிகாரிகளும் பெரும் போலீசுப் படையும் குவிந்தன. முன்னணியாளர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நாடகமாடிக் கொண்டிருந்த போது, மக்களைச் சுற்றி வளைத்துக் கொண்ட போலீசு, காட்டுமிராண்டித்தனமாக தடியடியில் இறங்கியது. தப்பியோடிவர்களை துரத்திச் சென்று தாக்கியதோடு, வீடு புகுந்து பெண்கள்  குழந்தைகளையும் அடித்து நொறுக்கியது.

 முத்தரையர் போர்டுக்கு செருப்பு மாலை போட்டவர்கள் யார்? இந்த போர்டுக்கு முன்பாக சிந்துப்படி போலீசு ஆய்வாளர் தலைமையில் பெரும் படையாக போலீசார் இரவு முழுவதும் காவல் இருந்துள்ளனர். போலீசுக் காவலை மீறி போர்டுக்கு எப்படி செருப்பு மாலை போட்டு அவமதிக்க முடியும்? அப்படியே போட்டாலும் போலீசு ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை?

 உண்மையில், போலீசு கும்பல்தான் செருப்பு மாலை போட்டு முத்தரையர்களை ஆத்திரமூட்டி, அதைச் சாக்காக வைத்து ஒடுக்கவும், சாதிக் கலவரமாகச் சித்தரித்து அடக்குமுறைக்கு நியாயம் கற்பிக்கவும் செய்துள்ளது. இதன்படியே, வலையங்குளம் கிராமத்தில் வீடுகள்  கடைகள் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு நள்ளிரவில் போலீசே தீ வைத்துக் கொளுத்தி விட்டு, கலவரத் தீ பரவுவதாக பீதியூட்டி, மேலும் பெரும்படையைக் குவித்து, வீடுவீடாகப் புகுத்து தாக்கியுள்ளது. பின்னர், ""போலீசாரைத் தாக்கினர்; போலீசு ஜீப்புக்கு தீ வைக்க முயன்ற கலவரக்காரர்களை துப்பாக்கியால் சுட்டு ஒரு போலீசு ஆய்வாளர் விரட்டினார்; வன்முறை பரவுவதைத் தடுக்க போலீசு தீவிர கண்காணிப்பு; வீடு வீடாக சோதனை; பலர் கைது'' என்று போலீசு கும்பலே கதை எழுதி செய்தியாக வெளியிட்டது. அவற்றுக்கு மசாலா சேர்த்து "நடுநிலை' நாளேடுகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டன.

 மே.வங்கம் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது கட்சிக் குண்டர்களை ஏவி ஒடுக்கியது போலி கம்யூனிஸ்ட் சி.பி.எம். அரசு. சட்டிஸ்கரில் சர்வகட்சி ஆதரவுடன் அரசே ""சல்வாஜுடும்'' எனும் ஆயுதமேந்திய குண்டர் படையைக் கட்டியமைத்து, போராடும் மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்கி வருகிறது. இந்த உத்திகள் நாடெங்கும் அம்பலப்பட்டுப் போயுள்ள நிலையில், செயற்கையாக சாதிக் கலவரம் என பீதியூட்டி, போராடிய விவசாயிகளைப் பழிவாங்கி, போராட்ட ஒற்றுமையைச் சீர்குலைத்து அடக்குமுறையை ஏவும் புதிய உத்தியுடன் புறப்பட்டுள்ளது, கருணாநிதி அரசு. அதை விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிக்காமல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதையே எலியார்பத்தி  வலையங்குளம் கிராமங்களில் நடந்துள்ள அடக்குமுறை, புதிய படிப்பினையாக உணர்த்துகிறது.

தகவல்களும் படங்களும்:
மனித உரிமை பாதுகாப்பு மையம் (ஏகீகஇ), மதுரை கிளை.

பரளிப்புதூர் தலித்துக்கள் மீதான் தாக்குதல்- உண்மையறியும் குழு அறிக்கை.


மதியம் திங்கள், பிப்ரவரி 21, 2011

   

பரளிப்புதூர் தலித்துக்கள் மீதான் தாக்குதல்- உண்மையறியும் குழு அறிக்கை.



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர் என்னும் கிராமம் மதுரை மாவட்டம் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் திண்டுக்கல் மாவட்ட கிராமம். இங்கு தலித் பிரிவினைச் சேர்ந்த பறையர்கள் 84 வீடுகளும் முத்தரையர் சமூகத்தினர் 600 வீடுகளும் உள்ளனர். இங்கு முத்தரையர் சமுதத்தினரே பெரும்பான்மை ஆதிக்க வகுப்பினர். இங்கு சாதி தொடர்பான பெரும்மோதல்களும், வெளிப்படையான பிரச்சனைகளும் இதுவரையிலும் நடந்திராத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறு சிறு புகைச்சல்கள் எழுந்து அடங்கி வந்துள்ளன. இக்கிராமம் மதுரையிலிருந்து நத்தம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலைவழியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே அமைந்துள்ளது. அவ்வாறு செல்லும் சாலையில் முதலில் தலித் குடியிருப்பும், அதிலிருந்து பிரிந்து செல்லும் சாலை வழியாக அரைகிலோ மீட்டர் தூரத்தில் முத்தரையர் வசிக்கும் குடியிருப்பும் அடுத்ததாக அமைந்துள்ளது.

இங்கு கடந்த 2011 பிப்ரவரி 6ம் நாள் தலித் பகுதியில் நடந்த திருமண நிகழ்சிக்காக தலித் மக்கள் சார்ந்திருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கொடியும், தி மு க கொடியும் அம்மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அமைந்துள்ள காலனி நீர் தேக்கத்தொட்டி மீது அம்மக்களால் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடிகள் நீர்த்தேக்கத் தொட்டி மீதே மூன்று நாட்கள் வரையிலும் இருந்துள்ளது. இந்நிலையில் முத்தரையர் சிங்கச்சின்னம் பொறித்த முத்தரையர் சாதிச்சங்க கொடியினை கொணர்ந்து தலித் மக்கள் பகுதியிலிருக்கும் நீர்த்தேக்க தொட்டி மீது கட்டினர். ஊரின் முகப்பிலேயே தலித் தரப்பு அடையாளம் ஒன்று தான் எல்லோரையும் வரவேற்பது போல் அமைந்திருக்கிறது என்ற சாதிசார்ந்த பொறாமையினால் அது கட்டப்பட்டது என்பதே தலித்மக்களின் குற்றச்சாட்டு. சாதி சமுகத்தின் அத்தகைய உளவியல் புரிந்துக்கொள்ளக்கூடியதே. இச்சிக்கலான நிலையை புரிந்து கொண்ட தலித் பகுதி அடங்கியுள்ள பகுதியின் ஒரேயொரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பஞ்சு என்பவர் கிராம பஞ்சாயத்து தலைவரான முத்தரையர் சமூகத்தினை சேர்ந்த நல்லியப்பன் என்பவரிடம் நிலைமையை சொன்னார்.



"உங்கள் கொடியை கழற்றிவிடுங்கள், எங்கள் சமூகத்தினரிடம் சொல்லி எங்கள் கொடியை அவிழ்க்க கூறுகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.இதற்கு மறுநாள் மாலை பஞ்சு தலித்தரப்பு கொடியை அவிழ்க்க சென்ற போது முத்தரையர் சாதிசங்கக்கொடி மீது செருப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதன் விளைவை உணர்ந்த பஞ்சு தலித் தரப்பு கொடியோடு அச்செருப்பையும் அகற்ற முயற்சித்தார். அப்போது அங்கு வந்த முத்தரையர் தரப்பினர் செருப்பை அகற்றக்கூடாது என்று தடுத்தனர். அதற்கு முன்பே பரளிப்புதூரை சுற்றியிருந்த முத்தரையர் கிராமங்களுக்கு சாதிசங்கக்கொடி அவமதிக்கப்பட்டதாக தகவல்களை அனுப்பியிருந்தனர். சுற்றுவட்டாரத்திலிருந்த 15 கிராமங்களிலிருந்த முத்தரையர்கள் 15 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் பரளிப்புதூரை இணைக்கும் நத்தம் நெடுஞ்சாலைகளில் வந்திறங்கினர். அதனாலேயே அந்த செருப்பை அகற்றக் கூடாது என்று முத்தரையர் தரப்பு கூறியிருந்ததாக தெரிகிறது.தலித்துகள் செருப்பைகட்டி அவமதித்தனர் என்று குற்றம் சாட்டி முத்தரையர் மறியலில் ஈடுபட "எங்களின் தனித்துவ அடையாளத்தை முடக்குவதற்ககான தருணத்தை உருவாக்க முத்தரையர்களே செய்து கொண்ட ஏற்பாடு அது" என்று அதனை தலித்தரப்பு மறுக்கிறது. நத்தம் நெடுஞ்சாலையில் இரவு 7 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்தரையர்கள் சுமார் 300 பேரோடு 15 வாகனங்களில் பரளிப்புதூர் தலித் குடியிருப்பை நோக்கி 11 மணியளவில் வந்தனர். அப்போது அங்கு பத்துக்கும் குறைந்த காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்புக்கு இருந்தனர். அது தாங்கள் சற்றும் எதிர்ப்பாராத ஒன்று என்று தலித் மக்கள் கூறுகின்றனர். பெட்ரோல்,கம்பு, கடப்பாரை, ஆகிய ஆயுதங்களோடு குடியிருப்புக்குள் 300 பேர் பெரும் ஆரவாரத்தோடு நுழைந்து வீடுகளை தாக்கினர். ஓட்டு வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன, ஓட்டு வீடுகளின் முன்புறமாகவும் பின்புறமாகவும் வேயப்படிருந்த கீற்று கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்பைக்குகளும்,சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுதோறும் பாத்திரங்கள் டிவி பீரோ ஆகியவை உடைக்கப்பட்டன. வைக்கோல் படப்பு கொழுத்தப்பட்டது, கான்கீரிட் வீடுகள் கடப்பாரைகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டன. மெத்தை வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் இரண்டாக உடைக்கப்பட்டு சாய்க்கப்பட்டது. திருமாவளவன் படம் வரையைப்பட்டிருந்த முகாம் பலகை கொளுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அரைமணிநேரம் வரை இத்தாக்குதல் நீடித்தது. ஆண்கள் எல்லோரும் இரவு நேரமென்றும் பாராமல் ஊரைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. பெண்கள் மட்டுமே இருந்தனர். குழந்தைகளின் ஆடைகளை விலக்கி ஆணா பெண்ணா என்று பார்த்து விட்டு சென்றுள்ளனர். தலித் பெண்களுக்கு முன்பு அக்கும்பலில் இருந்த ஆண்கள் நிர்வாணமாக நடந்து அப்பெண்களை ஏசியுள்ளனர்.

தாக்குதல் நடந்து இரண்டு நாளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.காவல்துறையின் நடவடிக்கை திருப்திதரக்கூடியதாக இல்லை. உரிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்படவில்லை. SC/ST (ACT)1989 - ஆம் சட்டத்தின்படி வழக்கு பதியப்படவில்லை.தாக்குதலில் காயம்பட்ட தலித் சமூகத்தினைச் சேர்ந்த நைனார் என்பவரையும் அய்யாவு என்பவரையும் முத்தரையர் கொடியை அவமதித்த வழக்கில் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் இப்போதுவரையிலும் பரளிப்புதூர் தலித்மக்களுக்கு தெரியாது. இது நியாயமற்ற கைது. உண்மை அறியும் குழு நேரடியாக பார்வையிட்டதன் அடிப்படையில் சேதங்களின் அளவானது. தலித் காலனியில் 98 சதவிகித வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடமும்,கோயிலும் மட்டுமே விடப்பட்டுள்ளன. தாக்கப்பட்டுள்ள வீடுகளில் ஓடுகள் சேதம் என்ற அளவில் 25 சதவிகிதமும், பொருட்கள் சேதம் தீவைப்பு எனும்- அளவில் 75 சதவிகித வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 15 க்கும் மேற்பட்ட மோட்டார்பைக்குகள், 10 - க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், வைக்கோல்படப்பு,பாத்திரங்கள்,டிவிகள் ஆகியவை சேதப்பட்டுள்ளன. குழந்தை பிறந்து 4 நாட்களே ஆகி வீட்டுக்குள் இருந்த அழகுமீனா என்ற பெண்ணும் கூட வீட்டிலிருந்து ஓட முடியாமல் ஓடியிருக்கிறார்.கர்ப்பம் இருந்த மாரிதேவி என்ற பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியுள்ளது. பெண்கள் அச்சத்தினால் வீடு ஒன்றில் மறைந்த பின்பும் கடப்பாறையை கொண்டு வீட்டை இடித்து மிரட்டியுள்ளனர். பழநி என்பவரின் டீக்கடையோடு கூடிய சிறு மளிகைகடையும் தீவைக்கப்பட்டுள்ளது. இரண்டு கோழிகள், ஒரு டஜன் ஆடுகள் எரிக்கப்பட்டன. காயம் என்றளவில் நைனா என்பவரும் செல்லம்மாள் என்பவரும் சிறுகாயம் அடைந்துள்ளனர். அங்கிருந்த மின்மாற்றியை (ட்ரான்ஸ்பர்ம் ) தாக்கி மின்சாரத்தை நிறுத்திவிட்டே தாக்குதலை தொடங்கியுள்ளனர்.தாக்குதலை முடித்துவிட்டு நத்தம் சென்ற அக்கும்பல் செல்லும் சாலையிலிருந்த தலித் குடியிருப்புகளை எல்லாம் தாக்கிக்கொண்டே சென்றுள்ளனர். குறிப்பாக வத்திப்பட்டி என்றும் கிராமத்திலிருந்த திருமாவளவன் படம் போட்ட பேனரும், மூன்று குடிசைகளும் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த பரளிபுதுரை நோக்கி போலீசார் திசை திரும்பியிருந்த நேரத்தில் நேராக நத்தம் சென்ற கும்பல் இரவு 1 மணியளவில் அங்கிருந்த ரவுண்டானாவில் முத்தரையர் பெரும்பிடுகு சிலையை சட்டவிரோதமாக நிறுவ முயற்சித்தது. போலீசார் தடுத்து கும்பலை விரட்டிய காரணத்தால் அம்முயற்சி நின்று போனது.
இப்பிரச்சனை தொடர்பாக பரளிபுதூர் தலித் குடியிருப்பினை பார்வையிட்டு ஊரில் இருந்த பெண்கள், ஊரை விட்டு வெளியேறியிருந்த ஆண்களை சந்தித்த நம் உண்மையறியும் குழு முத்தரையர் குடியிருப்பில் யாரும் இல்லாததால் ஊரில் கடைக்கோடியிருந்த சில வீடுகளின் சில பெண்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஊராட்சி மன்றத்தலைவரும் இல்லாததால் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொது அதுவும் அணைத்து வைக்கப்பட்டுயிருந்தது. இது தவிர காவல்துறை டி எஸ் பி ராஜராமனை சந்தித்து தகவல் திரட்ட முடிந்தது.

மேற்கண்ட யாவரின் வாதங்களாவன.



தலித்மக்கள்:-

எங்களுக்குள் பெரிய மோதல்கள் இருந்தது இல்லை. எங்களின் இரண்டு பகுதியிலும் தி.மு.க கட்சி சமமாக காலூன்றி இருந்தது. அண்மைக்காலமாக தலித் இளைஞர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முகாமை தொடங்கி கொடிகட்டுதல், திருமாவளவன் படம் போட்ட சுவரொட்டி ஒட்டுதல், பாடல்களை ஒலிப்பரப்புதல் என்று செயற்பட்டு வருகின்றனர். இது தவிர வெளிப்படையான அரசியில் முரண்கள் இல்லை. ஆனால் கடந்த கிராமபஞ்சயத்து தேர்தலின் பொது தொடர்ந்து பொது பஞ்சயத்தாக இருந்து வரும் பரளிபுதுரை ரீசெர்வ் பஞ்சயத்தாக மாற்றவேண்டுமென்று தலித் தரப்பில் சிறு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மற்றபடி 6 மாதத்திற்கொரு முறை சிறு சிறு மோதல்கள் எழுந்து உடனே சரியாகிவிடும் நிலைமையே இருந்து வந்தது.தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டது என்று தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு காரணமான கொடிகட்டுதல் சார்ந்த பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே முத்தரையர்கள் பிரச்னை செய்து வந்தனர். எங்கள் பகுதியிலிருக்கும் தண்ணீர் தொட்டி மீது கொடியை கட்டும் போதே முத்தரையர் பகுதியிலிருந்து முன்னாள் வார்டு உறுப்பினர் ஆர். கருப்பணன், அபர்ணா-வேன் உரிமையாளர் பாலமுருகன், கண்ணன், கணேசன், சின்னழகு, தேங்காய்வெட்டு - முருகன் ஆகியோர் கட்டக்கூடாது என்று தடுத்தனர். நீங்கள் கட்டினால் நாங்களும் கட்டுவோம் என்றனர். ஆதே போல கட்டவும் செய்தனர். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாக்கு ஒன்றை தேடுவதற்காக செருப்பையும் அவர்களே கட்டியிருக்க வேண்டும்.அவ்வாறு கட்டிவிட்டு மறியல் செய்தனர். மறியல் செய்து விட்டு பரளிபுதூர் காலனிக்கு முன்பாகவே நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் மற்றொரு தலித் குடியிருப்பான அம்பேத்கர் நகரில் 3 வீடுகளை தாக்கினர். அடுத்துதான் பரளிபுதூர் காலனிக்கு ஒரு கும்பல்வந்து பெரும்சத்தம் போட்டு கொண்டிருந்தனர். இது ஒரு வழக்கமான சத்தம் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால் அங்கிருந்த மாமரத்தில் நின்றுகொண்டு நெடுஞ்சலையிருந்த மற்றவர்களை போன்போட்டு அழைத்தனர். அப்போது சில போலிஸ்காரர்கள் இருந்தனர். சிறிது நேரத்தில் மின்சாரம் நின்றது. பிறகுதான் பெரும்கும்பல் தாக்குதலில் இறங்கியது.15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த முத்துரையர்கள் வலசை , வெள்ளியன்குன்றம் புதூர், கடவூர், புதுகோட்டை, விளாம்பட்டி,புதூர், லிங்கவாடி, பெருமாபட்டி, ஆணையூர், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களாவர்.எங்கள் மீது தாக்குதல் நடத்தி காவல்துறையினரை திசை திருப்பிவிட்டு நத்தம் ரவுண்டானாவில் முத்துரையர் சிலை வைப்பதே அவர்களின் நோக்கம் என்பது தலித் மக்களில் ஒருதரப்பார் குற்றச்சாட்டு.இத்தாக்குதலில் உள்ளூர்மக்கள் மட்டுமல்லாது முத்தரையர் சமூக பிரமுகர்களும் பங்கொண்டு உதவினர் என்பது தலித் மக்களின் கூற்று. வத்திப்பட்டி அம்சா - ஸ்டியோ உரிமையாளர் அம்சராசாவின் சுமோ, வத்திப்பட்டி - அழகு என்ற குட்டையன் தந்த பெட்ரோல், தேமுதிக ஒன்றிய பொறுப்பாளர் பாபு, சரந்தாங்கி ஊராட்சித்தலைவர் முத்தையன், காசம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ரமேஷ் ஆகியோர் பங்கு கொண்டனர்,அரசாங்கத்தின் உதவி இல்லை. எங்கள் உறவினர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் தந்த அரிசியில் சமைத்து வருகிறோம். அதிகாரிகளில் தவிர கலக்டர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. அரசியல் அமைப்புகளும் வரவில்லை.



முத்தரையர் தரப்பு:-


நாங்கள் தாயாய் பிள்ளையாய் தான் பழகினோம். எங்கள் சாதி பெண்கள் இருவரை தலித் தரப்பு திருமணமே கூட செய்திருக்கிறது. இப்போது வெளியூர்காரர்கள் தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்திருக்கிறார்கள். (ஊரில் ஒரு ஆணை கூட பார்க்க முடியாத நிலையில் இரு பெண்கள் மட்டும் தயக்கத்துடன் பதிவு செய்தது.)



காவல்துறை:-
டி எஸ் பி அவர்களை குழு சந்தித்து, எடுத்த நடவடிக்கை குறித்து கேட்ட போது. இரு தரப்பும் நடந்துகொண்டது சகிக்க முடியாதது என்றும் இரு தரப்பின் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தாக்குதல் நடந்தது தெள்ள தெளிவாக இருக்கும் போது ஏன் வெறும் சாதியை சொல்லி திட்டிய பிரிவில் வழக்கு தொடுத்துள்ளீர்கள் என கேட்ட போது, அவசரத்தில் நடந்ததாகவும் சார்ஜ் சீட்டில் சரி செய்வதாகவும் சொன்னார். எப் ஐ ஆர் இல் திருத்தலாமே, என சொன்னதற்கு இனி சாத்தியமில்லை என்றார். அவரை பொறுத்தவரை இரு தரப்பும் தவறு என்ற மனநிலையில் மொத்த பிரச்சனையையும் கருதி நடவடிக்கை எடுத்துள்ளார்.



உண்மையறியும் குழுவின் பார்வை:-



சமூகத்தளத்தில் தனித்தனி சாதிகளின் அடையாள உருவாக்கம் வலுப்பெற்று வரும் சமகாலச் சூழலில் முத்தரையர்களும் அத்தகு முயற்சிகளில் இறங்கி முத்தரையர் பெரும்பிடுகு சிலை போன்றவற்றை சாதித்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் தீண்டாத சாதியாக அடங்கி வாழ்ந்த சமூகத்தினரின் அரசியல் எழுச்சி முத்தரையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை அடக்கிவைக்கவும் , தங்கள் சாதி அடையாளத்தை உறுதியாக்கிக்கொள்ளவும் முத்தரையர்களை உந்தியது. இது நாள் வரையில் சிறு சிறு கோபங்களாக இருந்த இப்போக்கு இப்போது இத்தாக்குதல் மூலம் முழுவடிவம் பெற்றுளளது. இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதாம் பரளிப்புதூருக்கு அருகிலுள்ள வத்திப்பட்டி என்னும் ஊரில் முத்தரையர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட தலித் ஒருவர் ஊரை விட்டு வெளியேறி உள்ளார். இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் இத்தாக்குதலில் மும்முரமாய் இருந்துள்ளனர். பரளிப்புதூரில் விடுதலைச்சிறுத்தைகள் கொடிக்கம்பமும், பெயர்பலகையும் தாக்கப்பட்டமை தலித்துகளின் அரசியல் அடையாளம் மீதான கோபத்தையே காட்டுகிறது.தலித்குடியிருப்பு மீதான இத்தாக்குதல் மற்றுமொரு கொடியங்குளம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து இருந்து வருவதோடு, மிகச் சாதரணமாகி சமூக ஒப்புதலை பெற்றும் விட்டன. தாக்குதல் நடந்த பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரச்சனையை முன்னெடுத்துள்ளது. அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு தலித் கட்சிகளும் முன் வரவில்லை. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவம் நடந்து 3 நாள் ஆகியும் வராத நிலையில் எந்த சலுகையும் வாங்க மாட்டோம் என்று தலித் பெண்கள் எதிர்த்த போது விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் , அரசுடன் மோதல் போக்கு வேண்டாம் என்று வலியுருத்திதாக இளைஞர்கள் பதிவு செய்தனர்.பரளிபுதுரில் முத்துரையர்களே பெரும்பான்மை. தலித்துகள் சிறுபான்மையினர். பரளிபுதூரை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையும் முத்தரையர் கிராமங்களே. குறிப்பாக பரளிபுதூர் பஞ்சாயத்து என்பதே புதூர், பரளி, எம் ஜி ஆர் நகர், அழகாபுரி ,தேத்தாம்பட்டி, வேம்பரளி,பொடுகம்பட்டி,அம்பேத்கர் நகர், ஆகிய ஏழு கிராமங்களை உள்ளடக்கியதேயாகும். அங்கு ஊராட்சிதலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முத்தரையர்களே. மொத்தமுள்ள 9 வார்டுகளில் ஓரயொரு வார்டு மட்டுமே தலித் உறுப்பினரைகொண்டது.இங்கு பெரும் மோதல்கள் நடைபெறவில்லை என்பது உண்மையே.முத்தரையர்கள் மட்டுமே நிலம் உள்ளவர்கள். ஆனால் அவை பெரும் நிலக்கிலாரிய பண்பு கொண்டவை அல்ல. தலித்துகளில் பலரும் அவர்களிடம் வேலை செய்து வருபவர்களே . ஆனால் பல்வேறு மாற்றங்களின் வழியாக தலித்துகள் விவசாயக் கூலி வேலைக்கு செல்வது குறைந்து வருகிறது. தலித்துகளில் படிப்போர் எண்ணிக்கையும் முத்தரையர்களை ஒப்பிடும் போது கூடி வருகிறது.
கடந்த சில வருடங்களில் பரளிப்புதூர் தலித்துகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாமை தொடங்கியுள்ளனர். அது முதல் பொதுவான விழாக்கள் தொடங்கி குடும்ப விழாக்கள் வரையிலும் அக்கட்சி அடையாளம் தாங்கியே தங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். திருமாவளவனின் படம் தாங்கிய சுவரொட்டியும் பேச்சு அடங்கிய ஒலிநாடா ஆகியனவும் ஒலிபரப்பப்படுவதுண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் இதே ஊரை சேர்ந்த முத்தரையர் சாதி பெண்ணை தலித் ஒருவர் திருமணம் செய்திருந்தாலும் அவரின் குடும்பத்தோடு உறவு இல்லையே தவிர தாக்குதல் ஏதும் முத்தரையர் தரப்பில் நடத்தப்பட வில்லை. அதே போல மற்றொரு திருமணமும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளின் தனித்த அரசியல் முயற்சிகள் முத்தரையர்களை தொந்தரவு செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போதுதான் அக்கிரமத்தை ரிசெர்வ் பஞ்சயதாக மாற்ற வேண்டும் என்ற பேச்சும் தலித்துகள் மத்தியில் எழுந்து அடங்கியிருக்கிறது. இக்கிராமம் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்கள் தோறும் தலித்துகளிடையே தனித்த அரசியல் முயற்சிகள் எழுந்துள்ளன.

பரிந்துரைகள்:

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு:

1 . இரண்டு தரப்பும் தவறுகள் செய்துள்ளதாக வழக்கினை பதிவு செய்வது பாதிக்கப்பட்ட தரப்பை மீண்டும் தண்டிப்பதாகவும் ஆதிக்க சாதியினர் மீதான குற்றத்தை காப்பாற்றுவதாகவும் இருக்கும். உண்மையை திசை திருப்பும் அணுகுமுறையாகவும் இருக்கும்.

2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 3(10)(x) என்ற பிரிவின் கீழ் சாதியை சொல்லி திட்டியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனவே பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

sc/st வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்

3(1)(ii) - காயம் ஏற்படுத்தல்

3(1)(iii ) - ஆடைகளை களைதல்

3(1) (ix ) - அரசு அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்தல்

3(1) (x) - சாதிபெயரை சொல்லி திட்டுதல்

3(1) (xi ) - பெண்களை மானபங்கப்படுத்துதல்

3(1)( xiv) - பொது வழிகளை பயன்படுத்த தடை விதித்தல்

3(1) ( xv) - குடியிருப்பிலிருந்து அகற்றுதல்

3(2) ( iii) - சொத்துக்களை தீயிட்டு அழித்தல்

3(2) (iv) - குடியிருப்பில் தீவைத்தல்

3(2)( v) - 10 வருடத்திற்கு குறையாத தண்டனை

ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் .



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு :

1 . பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண சேதங்களை மதிப்பிட்டு அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் பயன்தரவல்ல நிவாரணமாக அவை அமைய வேண்டும்.

2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம்(1989) இன் கீழ் மாவட்ட ஆட்சியரை சிறப்பு அதிகாரியாக நியமித்து சேதங்களை பார்வையிட்டு நிவாரணத்தை மதிப்பிட வேண்டும்.

4 . தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்து மீண்டும் குடியமர்த்துவதொடு அச்சமற்ற முறையில் விசாரணையில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்க வகை செய்ய வேண்டும். மேலும் தலித் மக்களை கைது செய்வதற்கு தோதாக வழக்கை பதிவு செய்துவிட்டு காத்திருப்பதையும் காவல் துறை கைவிட வேண்டும்.

தமிழக அரசுக்கு :

1 . அரசு சார்பாக தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களையும் முத்தரையர் தரப்பு ஆக்கிரமிதுக்கொண்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன . தலித்துகளுக்கு நில உரிமை, அரசு சொத்துக்களில் உரிய பங்களித்தல் { குளம், கோவில் , கிராம சொத்து ஏலம் } .

2 . தலித்துகள் தாங்கள் விரும்பும் அரசியல் அடையாளத்தை மேற்கொள்வதற்கான சுதந்திர உரிமையை காப்பாற்றுதல்.

3 . சேதங்களை மதிப்பிடவும் சிக்கலை ஆராய்ந்து நிவாரணம் வழங்கவும் தனியான கமிஷன் ஒன்றை நிறுவ வேண்டும்.

4 . ஊரை விட்டு வெளியேறி அல்லல்படும் தலித் இளைஞர்களை உடனடியாக ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவும் குற்றம் சாட்டப்பட்ட முத்தரையர்களை தவிர மற்ற முத்தரையர் ஆண்கள் ஊர் திரும்பும் வகையில் காவல் துறை செயல்பட உத்தரவிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கவும், வலியுருத்துகிறோம்.


உண்மை அறியும் குழுவினர்

1.பகத்சிங் வழக்குரைஞர்

 2 . விஜயபாரதி வழக்குரைஞர்

 3 . ஸ்டாலின் ராஜாங்கம் பேராசிரியர்

4 . முரளி ஆய்வாளர்

5 . கண்ணம்மா ஆசிரியர்

6 . திவ்யா சட்ட மாணவர்

7. விஜயலட்சுமி சட்ட மாணவர்

8 . விஜயன் சட்ட மாணவர்

9. கிருஷ்ணா சட்ட மாணவர்

10. பகவன் தாஸ் சட்ட மாணவர்

11. பெரியசாமி சட்ட மாணவர்

12. பாண்டியன் சமூக ஆர்வலர்

13. தங்கப்பாண்டியன் சமூக ஆர்வலர்


புகைப்படங்கள் உதவி : திரு.பாரிச்செழியன்

0 comments:

 

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...